У нас вы можете посмотреть бесплатно திருப்புகழ்- கரிபுராரி காமாரி- விராலிமலை или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சொல் விளக்கம் கரிபுராரி-யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும், காமாரி-மன்மதனை எரித்தவரும், திரிபு ராரி-திரிபுரத்தை அழித்தவரும், தீயாடி-சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும், கயிலை யாளி-கயிலைமலைக்கு இறைவரும், காபாலி-மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும், கழையோனி-மூங்கிலின் கீழே தோன்றியவரும்*, கர உதாசன ஆசாரி-கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய குருநாதரும், பரசு பாணி-மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும், பானாளி-நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும், கணமொ டாடி-பூத கணங்களுடன் ஆடுபவரும், காயோகி சிவயோகி-உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ யோகியும், பரம யோகி மாயோகி-பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும், பரி அரா ஜடாசூடி-பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும், பகரொணாத மாஞானி-சொல்லுதற்கு அரிய மகா ஞானியும், பசுவேறி-பசுவை வாகனமாகக் கொண்டவரும், பரதம் ஆடி கானாடி-பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும், பர வயோதிக அதீத-மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய பரம ஞான வூர்-பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள் (சிவஞானபீடத்தில்) பூத அருளாயோ-யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ? சுருதி யாடி தாதா-வேதங்களை அத்யயனம் செய்த பிரமன் வி வெருவி யோட-மிகவும் அஞ்சி ஓடவும், மூதேவி துரக-மூதேவி அகன்று ஓடவும், கோப மீதோடி வடமேரு சுழல-மிக்க கோபம் கொண்டு, வடக்கே உள்ள மேருமலை சுழலவும், வேலை தீமூள-கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும், அழுது அளாவி வாய்பாறி சுரதினோடு சூர் மாள-வாய் கிழிய அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும், உலகேழும்-ஏழு உலகங்களுடன் திகிரி மாதிர ஆவார திகிரி சாய-வட்டமான, திசைகளை மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும், வேதாள திரளினோடு பாறோடு கழுகாட-பேய்க் கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், செருவில் நாடு-போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே, வான் நீப-பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே, கருணை மேருவே-கருணையின் மேருமலையே, பார திருவி ராலியூர்மேவு பெருமாளே.-பெருமை மிக்க அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே. 🦚🦚🦚