У нас вы можете посмотреть бесплатно கொங்கு வேளாளர் திருமணம் பட்டனிச்சீர்! KONGU VELLAR MARRIAGE PATTINICHEER! செய்யும் முறை! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கொங்கு வேளாளர் திருமணத்தில் பட்டனிச்சீர் என்பது முக்கியமானது. இது மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும்.இதனை மங்கல நீராட்டல் அல்லது புனித நீராட்டல் என்றும் கூறுவார்கள். திருமண நாளுக்கு முன்பு பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் இந்த சீர் நடக்கும். இங்கு நடைபெறும் சீர் 03-03-2022 அன்று வியாழக்கிழமை காலையில் பொள்ளாச்சி விஜய் திருமணமண்டபத்தில் திருப்பூரில் உள்ள செல்வி அபிநயாவிற்கும், பொள்ளாச்சியினை சார்ந்த செல்வ தினேஷுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போது, மணப்பெண் செல்வி அபிநயாவிற்கு நடைபெற்ற பட்டனத்தண்ணீர் ஊற்றும் சீராகும். இந்தச்சீரின் போது பகலாக இருந்தாலும் வண்ணார் பந்தம் பிடிப்பார்.( இது நூறு வருடங்கள் முன்பெல்லாம் மின்சாரம் இல்லாத காலமாகவும், சீரெல்லாம் மாலை நேரங்களில் நடக்கும் போது வெளிச்சத்திற்காக பந்தம் பிடித்திருப்பார்கள்! அதுவே நவீன காலத்திலும் சாங்கியம் என்ற பெயரில் தொடர்கிறது ) இந்த பட்டினிச்சீருக்கு கொங்கு நாவிதர் மற்றும் கொங்கு வண்ணார் என்கிற ஏகாளியும் அவசியம். பெண் வசிக்கும் ஊரின் கொங்கு நாவிதர் இந்தச்சீரினை முழுக்காதன் குலத்தின் அருமைக்கார பெண்ணிடம் கூற அருமைக்காரி அதனை செய்வார். கால மாற்றத்தின் காரணமாக இன்று பல சக்ரகத்தி என்று அழைக்கப்படும் நாவிதருக்குக்கூட சீர் செய்யும் முறையினை முழுமையாக அறிந்திடாத நிலையில் உள்ளார்கள். இந்தப்புனித நீராட்டலின் போது மணப்பெண்ணை கிழக்கு முகமாக உட்காரவைப்பார்கள். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து பிசைந்த சோறு ஏழு உருண்டை செய்வார்கள். அருமைக்காரி சருவச்சட்டியில் தண்ணீர் ஊற்றி மூன்று முறை தெளித்து ஊற்றுவார். அதன் பின் இந்த செஞ்சோறு உருண்டையை தலை, தோள்பட்டை , இரு கை மணிக்கட்டு , கால் பாதங்களில் வைத்து எடுப்பார்கள். பின் வெற்றிலை மடித்து கொடுத்து மென்று துப்பச்சொல்வார்கள். சில ஊர்களில் புளியமார் வைத்து அதனை தாண்டவும் (ஆக்கை போடுதல்) சொவார்கள். இந்தச்சமயத்தில் பலருடைய வாழ்த்துக்கள் பெண்ணிற்கு கிடைக்கும். இதன் பின் பெண்ணிற்கு புத்தாடை அணிவிப்பர். இந்த நீரினால் நனைந்த ஆடை பந்தம் பிடிக்கும் ஏகாளிப்பெண்ணிற்கு தானமாக வழங்கப்படும். இது போக சீர்களில் வைக்கப்படும் அரிசி போன்றவைகளுடன் தற்சமயம் திருமணத்திற்கு ரூபாய் ஐயாயிரமும் வழங்கப்படுகிறது. செஞ்சோறு சுற்றுதல் என்பது மணப்பெண்ணிற்கு திருஷ்டி கழிப்பதாகும். இந்த சீரினை அருமைக்காரியும், அபிநயாவின் அமுச்சியுமான திருமதி.சிவகாமி அவர்கள் செய்கிறார். இந்த சீரின் போது மணப்பெண்ணிற்கு சீர்க்காரம்மா தண்ணீர் ஊற்றவேண்டும். மணமகளின் அத்தை மணப்பெண்ணின் தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது அதனை வார்க்கவேண்டும். இதன் பின் மாமா மற்றும் அத்தை முறையாகும் உறவினர்களின் குழந்தைகள் சிறுவர், சிறுமியர் தமாசுக்காக வேப்பம் தழை , பூக்கள் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி மணப்பெண்ணின் மீது வேடிக்கைக்காக ஊற்றும் காட்சியினையும் பார்க்கலாம். பின் மாமா அத்தை தரும் பட்டுப்புடவை போன்ற சீர் பொருட்களை வைத்து, மிஞ்சி போடும் சீர் நடைபெறும்.