У нас вы можете посмотреть бесплатно சத்தியத்தைக் பற்றிக் கொள்; அசத்தியம் தானே மறையும்!HOLD ON THE TRUTH; UNTRUTH VANISHES AUTOMATICALLY! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
டிசம்பர் 14. ஞாயிறு சத்தியத்தைக் பற்றிக் கொள்; அசத்தியம் தானே மறையும்! சத்தியம் என்றும் இருப்பது, இறுதியில் வெல்லும். இறைவன் சத்தியத்தியத்திற்கு துணை நிற்பான். அசத்தியம் எப்போதும் இல்லாதது. சத்தியத்தை பற்றினால் அசத்தியம் கவனிப்பாரின்றி தானே நீங்கும். —------------------------------------------------- HOLD ON THE TRUTH; UNTRUTH VANISHES AUTOMATICALLY! TRUTH always exists. and it triumphs ultimately. The GOD stands for the TRUTH. UNTRUTH never exists. When the TRUTH is firmly held, the UNTRUTH without the support disappears automatically. —------------------------------------------------- சத்தியமேவ ஜெயதே’, என்பது நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் தேச சுதந்திரத்திற்கான கோஷம். சத்திற்கும் அசத்தியத்திற்கான யுத்தத்தில் இறுதி வெற்றி சத்தியத்திற்கே. இதுவே நமக்கு புராணங்கள் கற்பிக்கும் பாடம். பஞ்ச பாண்டவர்கள் தர்மத்தின் குறியீடு; கௌரவர்கள் அதர்மத்தின் குறியீடு. இறுதியில் வென்றவர்கள் பஞ்ச பாண்டவர்கள். அழிந்தவர்கள் கௌரவர்கள், அதர்மம். எப்போதும் இறைவன் தர்மத்தின் பக்கமே நிற்பான். பகவான் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தார். தர்மம் தோற்றதாக சரித்திரம் இல்லை. கிருஷ்ணர் போரில் பங்கு கொள்ளவில்லை. பாண்டவர்களின் வெற்றிக்கு வழி வகுத்து தந்தார். இதுதான் பாடம். நாம் பின்பற்றும் பாதை தர்மத்தின் அடிப்படையில் இருக்குமானால் இறைவன் நம்மோடு இருப்பான். தர்மத்தின் பாதை கடினமானது. நம்மை செம்மை படுத்தி நம் இலக்கை அடைய வழி காட்டும். ஆனால் கைவிடாது. தர்மவான்ங்களை கடவுள் என்றும் கைவிட மாட்டார். இறைவனே அவர்களின் சக்தி, உயிர் மூச்சி எல்லாம். கீதையில் பகவான் கிருஷ்ணர் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன் என்று மனித குலத்திற்கு உறுதி அளிக்கிறார். சத்தியம் என்று தோற்றதில்லை. அழிவதில்லை. அசத்தியம் என்றும் வென்றதாக வரலாறும் இல்லை. தற்காலிகமாக அசத்தியம் சிறிது காலம் ஆட்சிக் கட்டிலில் அமரலாம். ஆனால் அது நிலையானது அல்ல. பகவான் ரமண மகரிஷி கூறுகிறார் : சத்தியம் இல்லாது இருந்த காலம் என்று எப்போதும் இல்லை. அதுபோல அசத்தியம் இருந்தது என்ற காலமும் எப்போதும் இல்லை. சத்தியம் இல்லை என்று காண்பதும், அசத்தியம் இருப்பதாக தெரிவதும் மாயை. பொய். என்றும் இருப்பது சத்தியம் ஒன்றே. இதுவே திண்ணம், சத்தியம். பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ஸதுஷ்க்ருதாம்! தர்ம ஸம்ஸ்தாபனாய ஸம்பவாமி யுகே யுகே!! பகவான் கிருஷ்ணர் உபதேசிக்கிறார்: சாதுக்களை காத்து தர்மத்தை ஸ்தாபிக்க நான் யுகங்கள் தோறும் அவதரிப்பேன். பகவான் ரமண மகரிஷி தன் பதினாறாம் வயதில் தனக்கு மரண பயம் ஏற்பட்டபோது அதை சுய பரிசோதனை செய்து மரணத்தில் இறப்பது உடல் மாத்திரமே, என்றும் இருப்பது நான் என்னும் உணர்வு. அதுவே சத்தியம் அழியாதது என்று கண்டறிந்தார். அந்த நான் என்னும் உணர்வே சத்தியம். அதுவே நாம் என்று உபதேச வுந்தியார் பாடலில் கூறுகிறார். நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே நானற்ற தூக்கத்து முந்தீபற நமதின்மை நீக்கத்தா லுந்திபற அகந்தை உணர்வு அற்ற தூக்கத்திலும் “நான்” என்னும் உணர்வு உள்ளதால் அதுவே நாம். மற்ற உடல், பொறி புலன்கள் எல்லாம் தோன்றி மறையும் அசத்தியம். உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ் சடமசத் தானதா லுந்தீபற சத்தான நானல்ல வுந்தீபற விழித்த உடன் தோன்றும் நான் என்னும் எண்ணமே மூல எண்ணம். அதுவே ஆத்ம சொரூபத்தின் பிரதிபலிப்பு. நம் கவனம் முழுமையாக நான் எனும் சத்தியமான நம் மீது இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மனதின் சலனமாகிய எண்ணங்கள் மீது சென்றால் எண்ணங்கள் பெருகி மனம் வலுப்பெற்று நம் சொரூபத்தில் இருந்து விலகி விடுவோம். பகவான் ரமணர் உள்ளது நாற்பது பாடலில் நான் என்னும் உணர்வு எண்ணங்கள் அற்று இதயத்தில் ஒளிர்கிறது என்று உபதேசிக்கிறார் உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற யவுள்ளத்தே யுள்ளதா- லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர்வாயே இதயத்தில் எப்போதும் உள்ள ‘நான்’ என்னும் உணர்வு தவிர வேறு உணர்வு உள்ளதோ?. எண்ணங்களற்று இதயத்தில் அதுவாக இருப்பதே சத்தியமாகும் எனவே எண்ணங்கள் வடிவான மனம் ஓய நம் கவன சக்தி சத்தியமான நம் மீது பதிய வேண்டும். மனதி னுருவை மறவா துசாவ மனமென வொன்றிலை வுந்திபற மார்க்கம் நேரார்கு முந்திபற நான் எனும் எண்ணம் தோன்றும் போது அது யாது என்று விடாமல் விசாரித்தால், அது உதித்த இடத்தில் நாசம் அடையும். மனம் என்று தனியாக ஒன்று இல்லை என்பது தெரியவரும். இதுவே மனோ நாசத்திற்கான நேர் வழியாகும். எண்ணங்கள் தோன்றும் போது அதை உதாசீனப்படுத்தி கவனிக்காது நம்மை பார்க்க வேண்டும். பிறகு எண்ணங்கள் சக்தி இல்லாமல் நசிந்து போகும். அசத்தியம் ஒழிய சத்தியத்தைப் பற்றிக் கொள்வதே ஒரே வழி. “ஓம் தத் சத்” —----------------------------------------------