У нас вы можете посмотреть бесплатно Audio 2 - கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் _____________________________________________________________________ சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல்.. இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய, அன்னை பாத்திமாவின் வாழ்க்கை சரிதத்தை விளக்கி கூறும்"கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்" என்ற பாடல். ________________________________________________________________________ Lyrics கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள் 1 மாதவத் தூதர் முஹம்மது நபியின் மகளாய் வந்து பிறந்தார் கோதில்லாத முழுமதி எனவே குலக்கொடியாக வளர்ந்தார் தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி சங்கை வளர்மங்கை ஆனாரே 2 அன்னை ஹதீஜா நன்னயப் பண்பை அகமதில் தாங்கிச் சிறந்தார் கண்ணில் கருணை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார் செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவே வாழ்ந்தாரே 3 வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார் தீன்குலப் பெண்கள் துறவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார் கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே கனிவாய் பணிவிடை செய்தாரே 4 சொர்க்கத்து நிழலாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார் அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின் அன்புத் தாயாகி மகிழ்ந்தார் புவனத் தூதர் தந்தை முகம்மதை பொக்கிஷமாகவே மதித்தாரே 5 அரபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள் இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள் தந்தையை இழந்த அன்பு ஃபாத்திமா தணலில் புழுவாய் துடித்தாரே 6 எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம் தம்முடல் மெலிந்து கண்ணொளி மங்கி சருகென மாறிப் போனார் விந்தைகள் சூழும் இப்புவி மீதில் விரைந்தே கழிந்தன மாதங்கள் 7 இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினாலே உணர்ந்தார் தம்முடல் குளித்து கஃபனுடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார் கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள கணவரை கனிவுடன் பார்த்தாரே 8 வல்லோன் நல்கிய அர்ஷின் புலியே விடை கொடுத்தனுப்புங்கள் என்றார் பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுஸைனை பிடித்தவர் கையில் கொடுத்தார் அல்ஹம்துலில்லா என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே அகிலத்தின் வாழ்வை முடித்தாரே இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் ******************************** #golden_voice