У нас вы можете посмотреть бесплатно SRI SRINIVASA PERUMAL TEMPLE OSUR || HD VIDEO или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SRI SRINIVASA PERUMAL TEMPLE OSUR || HD VIDEO sreekavee tv you tube link..- / @sreekaveetvofficial sreekaveetv fb page link / sreekaveetv ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு PC: 604405 நினைவில் வைத்தால் கனவில் காட்சி தரும் ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சென்னையிலிருந்து மேல் மருவத்தூர் –வந்தவாசி செல்லும் சாலயில் மருதாடு சந்திப்பிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது (103 கிலோமீட்டர்—21/2 மணி) .மிகவும் புராதனமான இக்கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்புவராயர் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த கிராமத்தை தானமாக வழங்கியது இங்குள்ள கல் வெட்டில் செதுக்கப்பட்டது. இன்றும் அக்கல்வெட்டை காணலாம். இக்கோவிலில் திருவிழாக்களும் பூசைகளும் ப்ரம்மோத்ஸவங்களும் காலங்காலமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தன. ஸ்ரீ் அஹோபில மட ஜீயர்களும் இங்கு வந்து மங்களாசாசனம் செய்துள்ளனர். நாளடைவில் காலத்தின் மாற்றத்தின் விளைவாக சரியான பராமரிப்பு இல்லாமல் இக்கோவில் மிகவும் பழுது அடைந்தது. அதனால் இவ்வூர் கிராம பெரியோர்களும் இவ்வூரை விட்டு சென்ற பலரும் மிக பெரும் முயற்சி எடுத்து “ஓசூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் டிரஸ்ட்” என்ற அமைப்பின் மூலமாக “புனருத்தாருணம்” செய்ய முடிவெடுத்தனர்.“குமுதம் ஜோதிடம்” புகழ் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் மூலமாக இக் கோவிலைப்பற்றி “சிறப்பு கட்டுரை” எழுதி வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் மூலமாக இக்கோவிலின் புணருத்தாரன வேலைகள் தொடங்கின. பல பக்தர்களின் நன்கொடை மூலமாகவும், இன்னிசை புகழ் “ல்க்ஷ்மன் ஸ்ருதி” நிகழ்ச்சியும் கை கொடுத்தன. பின்னர் “தென்னாங்கூர் ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் ஓசூர் கோவில் கட்டிட நிதிக்காக “ஒரு சிறப்பு” கல்யாண உத்சவம் சென்னையில் நடத்திக்கொடுத்தார். இதன் மூலமாக கோவில் வேலைகள் மும்முறமாக நடைபெற்று 60% பூர்த்தியாகி “வாசல் நிலைக்கதவு”அஸ்திவாரம் போட்டாகிவிட்டது. கோவிலின் கொடிமரத்திற்கு கேரளாவைச்சேர்ந்த ஒரு குடும்பம் உதவிதயது. இவையெல்லாம் “ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளின் பூரண அனுக்ரஹதினால் அன்றோ! எங்களின் கோவிலின் கட்டிட நிர்மாணத்தை ஸ்தபதி திரு A.ராதாகிருஷ்ண்ன் அவர்கள் மிக திறமையாகவும் பக்தி ஸ்ரத்தையுடனும் செய்வத்ற்கு நாங்கள் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். எங்களின் கோவிலின் கட்டிட நிதிக்கு உங்களுடைய பரிபூரண ஆதரவை வேண்டி மிக விரைவில் “கும்பாபிஷேகம்” நடைபெற வேண்டுகிறோம். கலைமாமணி ஸ்ரீ ஸ்ரீகவி அவர்களின் “”ஞான மலரில்” எங்கள் ஓசூர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் பற்றி வெளியிட அனுமதி அளித்தற்கு மனமார்ந்த நன்றியுடன் அவர் தம் குடும்பத்தினருக்கு பரிபூரண ஆயுர் ஆரோக்கியமும் அளித்திட பிரார்திக்கிறோம். வாழ்க வளமுடனும் நலமுடனும். ஓவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உத்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்வதற்க்கு “DELUX” பஸ் ஏற்பாடு செய்து விருப்பமானவர்களை இலவசமாகஅழைத்து செல்கிறோம். எங்கள் வங்கி : சிட்டி யூனியன் வங்கி கிளை:வேளச்சேரி : S.B.Account: 500101010808569. IFSC Code: CIUB 0000262 OSUR SRI SRINIVASA PERUMAL TEMPLE TRUST. ADM OFFICE: “SRI SARATHI NILAYAM” 2/14 BHARATHINAGAR FIRST STREET, T NAGAR, CHENNAI 600017. President: A.K.GOPAL REDDIYAR, Secretary: R.SRINIVASA RAAGHAVAN. 9884447570 / 28344418 Treasurer: P.G.RATHINAM YADHAV 74185 21400 / 04183