У нас вы можете посмотреть бесплатно செய்யாறு | திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு Cheyyar Vedapureeswarar Temple history in Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருச்சிற்றம்பலம் சிவஸ்தலம் பெயர் திருவோத்தூர் ( தற்போது செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது ) இறைவன் பெயர் வேதபுரீஸ்வரர், வேதநாதர் இறைவி பெயர் பால குசாம்பிகை, இளமுலைநாயகி ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று. சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ.சென்றால் செய்யார் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 20 கி.மீ. சென்றால்.இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 34 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால்தான் மூலவரை தரிசிக்க முடியும். ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது. சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும் வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) (4) புறவார் பனங்காட்டூர் என்பன. எங்கும் இல்லாத அதிசயமாக இங்கு 11 தலைகள் கொண்ட நாகம் குடை பிடித்தபடி இருக்கும் நாகலிங்கம் உள்ளது. சனிக்கிழமை தினதன்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரை உள்ள ராகு காலதில் பூஜைகள் செய்ய நாக தோஷம் விலகும். இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள், மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள், இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம். அன்புடன் சிவ.ஜவஹர் ☎️ 9551623296 #சிவ_ஜவஹர் #Siva_Jawahar இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.