У нас вы можете посмотреть бесплатно Pancha Bootha Mudras. உடல் ஆரோக்கியத்திற்கு பஞ்சபூத முத்திரை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
/ @mehalasworld Pancha Bootha Mudras. Pancha Bootha Mudras are the basic Mudras. Those who cannot do hard exercises can do Mudras and can recover from ailments. First basic mudra is Prithvi mudra. The tip of the the thumb should touch the tip of the the ring ring finger. The the other 3 fingers should be straight. By doing Prithvi mudra general health improves. Second basic mudra is varuna mudra. The tip of the Thumb should touch tip of the the little finger. The the other 3 fingers should be straight. By doing this mudra blood is purified. The third basic mudra is vayu mudra. The tip of the index finger should touch the the base of the thumb. By doing this air circulation in the body is improved. The fourth mudra is Aakash mudra. The tip of the thumb should touch the tip of the middle finger. By doing this Akash energy in the body is activated. உடல் நலத்திற்கான முத்திரைகள் இன்றைய சூழ்நிலையில் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது ரொம்பவும் அவசியமாகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு சத்துள்ள உணவுகளை உண்பதோடு உடற்பயிற்சிகளும் அவசியமாகும். நடைப்பயிற்சி, ஆசனங்கள் போன்ற கடினமான பயிற்சிகளை எல்லோராலும் எல்லா நேரத்திலும் செய்ய முடியாது. முத்திரை பயிற்சிகள் என்பவை மிகவும் எளிமையாக செய்யக்கூடியவை. எல்லோராலும் எந்த நேரத்திலும் செய்ய முடியும். நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நம் விரல்களிலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. விரல்கள் மூலமாக நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை இயக்குவதேமுத்திரை பயிற்சி ஆகும். சரியான அளவில் முத்திரை பயிற்சிகள் செய்தால் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும். நோய் எதிர்ப்பு சக்திகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். யோகாசன பயிற்சி செய்ய முடியாதவர்கள் உடல் வலிமை அற்றவர்கள் உடல்நலம் இல்லாதவர்கள் இந்த முத்திரை பயிற்சிகள் மூலம் ஆரோக்கிய வாழ்வைப்பெற முடியும். முத்திரைகளில் அடிப்படையான முத்திரைகள் பஞ்சபூத முத்திரைகள். முத்திரைப் பயிற்சி செய்ய துவங்கும்போதுமுதலில் பஞ்சபூத முத்திரைகளை செய்ய வேண்டும். பிறகு மற்ற முத்திரைகளை செய்ய வேண்டும். பஞ்சபூத முத்திரைகளில் முதலாவதாக வருவது பிரித்திவி முத்திரை. இந்தப் பிரித்திவி முத்திரை செய்யும்போது நம் உடலில் உள்ள நிலம் என்கின்ற பூதம் சமநிலை படுகிறது. பிரித்திவி முத்திரை செய்வதால் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு நீங்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். தோலின் பளபளப்பு தன்மையை அதிகரிக்கும். உணவு எளிதில் ஜீரணமாகும். அலைபாயும் மனம் அமைதி பெறும் . பொறுமை ,தன்னம்பிக்கை ஏற்படும். உடலின் செயல்திறனை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவும். இத்தனை பலன்களைத் தரக்கூடிய அந்தப் பிரித்திவி முத்திரையைச் செய்ய தரையில் சமதளத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். நம் கையில் மோதிர விரலின் நுனியும் கட்டைவிரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இதுவே பிருத்திவி முத்திரை. இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை செய்யலாம். இந்த முத்திரையை முதலில் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்து 30 நிமிடங்கள் வரை செய்யலாம். மோதிர விரலில் உள்ள நிலம் என்கின்ற பூதமும், கட்டை விரலில் உள்ள நெருப்பு என்கின்ற பூதமும் சேரும்போது நிலம் தூய்மையடைகிறது. அதனால் உடலும் மனமும் தூய்மையடைகிறது. உடலின் செயல்திறனை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பஞ்சபூத முத்திரைகளில் இரண்டாவதாக வருவது வருண முத்திரை. வருணன் என்றால் மழை என்று பொருள்.அதாவது தண்ணீர். இந்த வருண முத்திரையைச் செய்யும்போது நம் உடலில் உள்ள நீர் சக்தியானது சமநிலைப்படுகிறது. வருண முத்திரை செய்வதால் ரத்தம் சுத்தமாகி ரத்த ஓட்டம் சீராகும் . தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். உடல் வெப்பம் சீராக இருக்கும். இரண்டு கைகளிலும் கட்டைவிரல் நுனியையும் சுண்டு விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடுவது போல் வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும் குளிர்காலங்களில் குறைவான நேரம் இந்த முத்திரையை செய்வது நல்லது. பஞ்சபூத முத்திரைகளில் மூன்றாவதாக வருவது வாயு முத்திரை. ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் கீழ்ப்பகுதியை தொடுவது போல் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டை விரலை ஆள்காட்டி விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் தர வேண்டும் . மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இதுவே வாயு முத்திரை. இந்த முத்திரை செய்வதால் உடலில் காற்று சமநிலையில் இருக்கும். அஜீரணம் ,வாயுத்தொல்லை, பசியின்மை அகலும் . மூட்டு வலிகள் நீங்கும் . தெம்பு உண்டாகும் . மன இறுக்கம் நீங்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பஞ்சபூத முத்திரைகளில் அடுத்து வருவது ஆகாய முத்திரை. கட்டை விரல் நுனியும் நடு விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடுவது போல் வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையை செய்வதால் நம் உடலில் உள்ள ஆகாய சக்தி தூண்டப்படுகிறது. சத்தத்தை உணரக்கூடிய காது தூண்டப்படுகிறது . காதில் உள்ள அடைப்புகள் நீங்கி கேட்கும் சக்தி அதிகரிக்கும் . காது சம்பந்தமான மற்ற நோய்களும் நீங்கும் . இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் . மன அமைதி பிறக்கும் . மனதில் தெளிவு உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு ஏற்படக்கூடிய எலும்புகள் தொடர்பான நோய்கள் நீங்கி எலும்புகள் வலுப்பெறும்..