У нас вы можете посмотреть бесплатно நீதிமானாய் வீற்றிருக்கும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்.! | VIRUDHACHALAM KOLANJIAPPAR KOIL или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நீதிமானாய் வீற்றிருக்கும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்.! | VIRUDHACHALAM KOLANJIAPPAR KOIL தமிழகத்தில் உள்ள கோவில்களில் கந்தன், வடிவேலன், கார்த்திகேயன் ஆறுமுகன், குமரன், குகன், சரவணன்,சண்முகன், சுப்ரமணியன் என்று அழகன் முருகன் என்ற பல்வேறு பெயர்களோடும்,...... மயில், சேவல், யானை என்று தன் வாகனங்களோடு காட்சித்தரும் முருகன் இக்கோவில் சுயம்பாய் எழுந்து பலிபீடாமாய் காட்சியளித்து ஸ்ரீகொளஞ்சியப்பர் எனும் பெயரோடு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார் உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட முருகன் அருள்பாலித்து வரும் இத்திருத்தலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகருக்கு மேற்கே மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது முன்னொரு காலத்தில் கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்திற்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு தன் கால்களால் தேய்த்து,பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் பசு பால் சொரிந்த அந்த இடத்தில் ஒரு பீடம் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்த நிலையில் இது அருவமாய் உள்ள ஆறுமுகப்பெருமான் என்று விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் விடை கிடைத்தது. அதன்படி , விருத்தாசலத்தில் வீற்றிருந்த பழமலைநாதரை வணங்கி பாடாமல் சென்ற சுந்தரை வழிமறித்த முருகன், அவரின் தவறினை உணரச்செய்த வனப்பகுதி இதுதான் என்பதால், பசு சொறிந்த அந்த பீடம் பரம்பொருளின் மைந்தன் முருகன் என்று முன்னோர்கள் கண்டுபிடித்து, கோவில் அமைத்து ஸ்ரீகொளஞ்சியப்பர் என நாமத்தோடு முருகனை வணங்கி வந்தனர் பல நூற்றாண்டுகள் பழமையான கொளஞ்சியப்பர் கோயிலில் இரண்டு தூண்களுடன் காட்சி தரும் தோரணமண்டபமும் அதன் உள்ளே ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் எழிலுற அமைந்துள்ளது கோவிலில் உள்ளே மூலஸ்தானத்தில் மூன்றடி உயர பீட வடிவில் உள்ள கொளஞ்சியப்பருக்கு கிரீடம் சூட்டி வெள்ளியால் கண்ணமைத்து, பீடத்தின் கீழே முருகனின் ஆறு எழுத்து மந்திரமான சரவணபவ சடாச்சரம் அமைக்கப்பட்டுள்ளது . முருகனுக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனி விமானத்துடன் கூடிய கருவறையில் பெரிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறார் அதோடு திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடும்பனும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருவதோடு நீண்ட தாடி வைத்துக்கொண்டு காட்சி தரும் முனியப்பர் தனி சன்னதி கொண்டு நீதி கேட்டு வருவோர்களுக்கு அருள் பாலிக்கிறார். கொளஞ்சியப்பரின் இக்கோவிலில் கொளஞ்சியப்பர் நீதிதேவனாக இருந்து நீதி வழங்கி வருகிறார் என்று தல வரலாறு கூற்கிறது.வீடுகளில் பொருட்கள் திருடு போய்விட்டாலோ, அல்லது யாரேனும் வழிப்பறி செய்து அபகரித்துவிட்டாலோ, அடிதடி, தீங்கு போன்ற தேவையற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலோ நீதி வேண்டி காவல் துறை அல்லது நீதி மன்றத்துக்கு விண்ணப்பிப்பது போல பாதிக்கப்பட்டவர்கள் கொளஞ்சியப்பருக்கு விண்ணப்பித்து நீதியை பெறுகின்றனர் . மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்ப்பிக்கின்றனர். கொளஞ்சியப்பர் நீதி தேவன் என்றால், நீண்ட தாடி வைத்துக்கொண்டு காட்சியளிக்கும் முனியப்பர் தான் அவரது விசாரணை அதிகாரி என்றும் முருகனின் உத்தரவின் பேரில், முனியப்பர் குதிரை மீதேறி சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று உண்மை நிலவரத்தை முருகனிடம் சமர்ப்பிக்கும் போது அதன்படி கொளஞ்சியப்பர் நீதி வழங்குவார் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர் இத்தலத்தில் நம்பிக்கையோடு வருபவர்களுக்கு முருகன் நீதி வழங்குவதோடு , வைத்தியராகவும் இருந்து பக்தர்களின் குறை தீர்த்து வருகிறார். இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையை பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமை என கூறுகின்றனர். கை கால்களில் வலி, காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தமான தீராத நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள் உலகெமெங்கும் உள்ள பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து திருநீர் கலந்த வேப்ப எண்ணெய்யை பெற்று நலமடைந்து வருகின்றனர் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்கவில்லை என்று பல்வேறு பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டு பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்த 3 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் தங்கள் வேண்டுதலை ஸ்ரீகொளஞ்சியப்பர் நிறைவேற்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. #malaimurasu #KOLANJIAPPAR #virudhachalam @malaimurasunewslive Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics. Follow on: Insta : / malaimurasutv_official twitter : / malaimurasutv facebook : / malaimurasu website : http://www.malaimurasu.com Live News : / malaimurasunewsdigital SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive