У нас вы можете посмотреть бесплатно முருகு தமிழ்.2072 | சம்பந்தர் தேவாரம் | முதுகுன்றம் பதிகம் | இசை&வரிகளுடன்| முனைவர் பொன்மணி சடகோபன்| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சம்பந்தர் தேவாரம் முது குன்றம் பதிகம்) -- மத்தமும் திங்களும் சூடி .. மழவெள் விடைமிசை ஏறி கத்தும் கடலுமிழ் நஞ்சைக் .. கரந்தருள் செய்த மிடற்றன் புத்தம் புதிய மலரால் .. பொன்னடி போற்றிசெய் கின்ற பத்தர் பவமறுத் தாளும் .. பழமலை நின்ற பரனே. -- மேவலர் முப்புரம் வேவ .. மேருவில் ஏந்திய வீரன் நாவல ஊரர் தமிழை .. நச்சியம் பொன்தரு நம்பன் காவல னேயருள் என்று .. கடிமலர் தூவும் அடியார் பாவம் அறுத்தும்பர் நல்கும் .. பழமலை நின்ற பரனே. -- சடையினில் தண்புனல் தாங்கி .. சாம்பலை மெய்யினில் பூசி நடையில் பிடியை நிகர்த்த .. நாரியைப் பாகம் நயந்தான் விடையின் மிசைவரும் ஐயன் .. வேட்டுவக் கோலத்தில் சென்று படையினைப் பார்த்தற் கருளும் .. பழமலை நின்ற பரனே. -- கானையம் பெய்ம்மதன் ஆகம் .. கண்ணுத லாற்பொடி செய்தான் மானை ஒருகரம் ஏந்தி .. மழுவொடு சூலமும் தாங்கி ஆனை உரிவையைப் போர்த்த .. அழகன் அரிவையொர் பங்கன் பானெய் தயிருகந் தாடி .. பழமலை நின்ற பரனே. -- எண்டிசை எங்கும் பரவி .. எரித்த கடல்விடம் தன்னை உண்டிருள் கண்டத் தொருவன் .. ஒண்மழு வாளினன் தாளை மண்டிய அன்பொடு வாழ்த்து .. மார்க்கண்டர் இன்னுயிர் காத்துப் பண்டடற் கூற்றை உதைத்தான் .. பழமலை நின்ற பரனே.! -- செந்தழல் போல்திரு மேனிச் .. செல்வனைச் சிந்தையில் வைத்து வெந்தவெண் ணீற்றினைப் பூசி .. வெறிகமழ் மாலைகள் பாடி கந்த மலர்களைத் தூவிக் .. கழலிணை கைதொழு வார்தம் பந்தம் அறுத்தருள் செய்யும் .. பழமலை நின்ற பரனே. -- ஆரிடர் தீர்ந்திட வேண்டி .. அனுதினம் தாள்தொழு வார்கள் கோரிடும் யாவையும் நல்கும் .. கொள்கையன் வெண்டலை ஏந்தி ஊரிடும் உண்பலிக் காக .. உழலும் ஒருவன் இருளில் பாரிடம் சூழ நடிக்கும் .. பழமலை நின்ற பரனே. -- மாலத னால்மலை பேர்த்த .. வல்லரக் கன்தனை அன்று காலதன் ஓர்விரல் இட்டுக் .. கன்றிட வைத்திசை கேட்டான் சேலன கண்ணி மணாளன் .. செய்யவன் ஒண்மழு வாளன் பாலன நீறணி மார்பன் .. பழமலை நின்ற பரனே. -- முன்னயன் மாலிவர் நேட .. முடிவில் சுடருருக் கொண்டான் வன்னியும் மத்தமும் கீற்று .. மதியும் அரவும் திகழும் சென்னியன் தோடொர் செவியன் .. திருப்புகழ் தன்னைத் தினமும் பன்னிடும் அன்பர் அகத்தன் .. பழமலை நின்ற பரனே. -- வேம்பை இனிய கரும்பு .. விரைந்துவந் துண்ணுமின் என்னும் தீம்பர்தம் சொல்மதி யேன்மின் .. தினந்தொறும் அஞ்செழுத் தோதி ஓம்பும் அடியவர்க் கன்பன் .. உறுதுயர் தீர்க்கும் துணைவன் பாம்பும் மதியும் புனைந்து .. பழமலை நின்ற பரனே. -- அணியென வெண்திரு நீறும் .. அக்கும் புனைந்தர னுக்கே பணிசெயும் பண்புடை யார்தம் .. பண்டை வினைகளைத் தீர்ப்பான் மணியணி கண்டன் மதியம் .. மணங்கமழ் கூவிளம் கொன்றை பணிமணி நீரணி சென்னிப் .. பழமலை நின்ற பரனே. -- அமைப்பு முருகு தமிழ் முனைவர் பொன்மணி சடகோபன்