У нас вы можете посмотреть бесплатно நோன்பு பெருநாள் தரும் சிந்தனைகள் - பெருநாள் உரை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நோன்பு பெருநாள் தரும் சிந்தனைகள் பெருநாள் உரை அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 1 - ஒவ்வொரு துவக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ரமலான் துவங்கி முடிந்ததை போல், உலகத்திலுள்ள அனைத்திற்கும் ஒரு துவக்கம் இருப்பதைப் போல் ஒரு முடிவும் உண்டு. 2 - சிரமங்களை ஏற்பதே வழிபாட்டின் வெளிப்பாடு! நோன்பில் பசி, தாகம் போன்ற சிரமங்களை எல்லாம் தாங்கியே வழிபாடுகளை நிறைவேற்றினோம். அதுபோல் எல்லா வழிபாடுகளிலும் சிரமங்கள் இருக்கும். அந்த சிரமங்களை இன்முகத்தோடு ஏற்று செயல்படுத்தும் போதுதான் அதனுடைய பலன்களை ஈருலகிலும் முழுமையாக பெற முடியும். 3 - தொழுகை!!! தொழுகை!!! தொழுகை!!! நமது மார்க்கத்தின் அடித்தளம் தொழுகையே! வெற்றியின் அடையாளமும் தொழுகையே!! அல்லாஹ்வின் அருளையும் உவப்பையும் பெற்றுத் தரக்கூடிய பேராயுதமும் தொழுகையே!! ரமலானில் நாம் தொழுததைப் போலவே, ரமலான் அல்லாத காலங்களிலும் நாம் தொழுது கொண்டே இருக்க வேண்டும். 4 - நம்பிக்கையாளர்களின் சந்தோஷமும்!! நயவஞ்சகர்களின் சந்தோஷமும்!! நோன்பு முடிந்து பெருநாள் வரும்போது இறை நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றி விட்டோம் என்கிற திருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், நயவஞ்சகர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்!! அதாவது, அ(ஹ)ப்பா.... கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து விட்டது!! இனி நாம் கட்டுக்கடங்காமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் !! என்கிற திருப்தியை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர். இதில் நமது மகிழ்ச்சி எதனடிப்படையில் உள்ளதென ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். 5 - எல்லோருக்கும் ரமலானும், ஈதும் ஒரே மாதிரி இருப்பதில்லை! சாதாரணமான சூழலில், பிரச்சனைகள் ஏதும் இன்றி நிம்மதியாக நம்மில் பலபேர் நோன்பை கழித்து பெரு நாளை அடைந்திருப்பதைப் போலவே, உலகில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லோரும் நிம்மதியான சூழலில் நோன்பு வைக்கவில்லை! குறிப்பாக இதே ரமலானில் மிகப்பெரும் கஷ்டங்களையும் சிரமங்களையும் போர் சூழலையும் எதிர்கொண்டே ஃபாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்களது ரமலானை கிடைத்திருக்கிறார்கள். பெருநாளையும் கொண்டாடி இருக்கிறார்கள். 6 - நபி காலத்து முதல் பெருநாள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் முதன் முதலாக முஸ்லிம்கள் கொண்டாடிய பெருநாள் பத்ரு யுத்தம் என்கிற மாபெரும் தியாகத்தை தொடர்ந்து அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த பெரு மகிழ்ச்சி என்பதையும் நாம் நினைவில் கூற வேண்டும். 7 - ரமலான் மாதத்தின் அதிவேக முடிவு! இப்போதுதான் ரமதான் ஆரம்பித்ததை போல் இருந்தது. கண்மூடி திறப்பதற்குள் ரமலான் உடைய மாதமே முடிந்து விட்டது. அது போலவே, இந்த உலகமும் வெகு விரைவாக முடியும். ஆதலால் நாம் மறுமையை மறக்கக்கூடாது!! மரணத்தையும் மறக்கக்கூடாது!! 8 – பேணுதலுடன் வாழ மார்க்கச் சட்டங்களை கேட்டறிதல்! இந்த ரமலானில் மார்க்கம் சம்பந்தப்பட்ட எத்தனையோ கேள்விகளை, சந்தேகங்களை இஸ்லாமிய அறிவுள்ளவர்களிடம் கேட்டு தெரிந்தோம்! தெளிந்தோம்!! இந்த “தெளிவு அடைதல்” என்பது நோன்புடன் தொடர்புடைய சட்ட திட்டங்களோடு முடிந்து விடக்கூடாது. மாறாக, நம்முடைய வாழ்க்கையின் “ஹலால் ஹராமோடு” தொடர்புடைய எல்லா விஷயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் 9 - பிரார்த்தனையும் பாவமன்னிப்பும்!! இந்த மாதம் முழுவதும் நம்முடைய நேரத்தின் பெரும் பகுதி பிரார்த்தனையிலும் பாவமன்னிப்பிலும் கழிந்தது. பாவமன்னிப்பும், பிரார்த்தனையும் மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய ஒன்றாக இருப்பதோடு படைத்தவனோடு நம்முடைய தொடர்பை வலுப்படுத்துகிறது. எனவே இந்தப் பிரார்த்தனையும் பாவமன்னிப்பு கோரலும், மரணம் வரை நம்மிடத்தில் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும். 10 – தக்பீரின் தத்துவம்!! அல்லாஹ்வை மேன்மைப்படுத்துதல், அல்லாஹ்வை மகத்துவப்படுத்துதல் என்பது இதற்குரிய பொருள். பெருனாளின் அறிவிப்பு வந்த கனத்திலிருந்து, இந்த திடல் தொழுகையில் நாம் கூடிய இந்த நேரம் வரை “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” என்று அல்லாஹ்வை பெருமைப்படுத்தி கொண்டே இருக்கிறோம்! காரணம், இந்த உலகத்தில் உள்ள எல்லாமே சாதாரணமானது. அழியக்கூடியது!! அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் தான் நிலைத்து நிற்கும்!! அந்த அல்லாஹ்வே அனைத்திலும் சார்ந்து இருப்போம்!! அல்லாஹ்வின் அருளை பெற்று நிற்போம்!! --------------------------------------------------------------------------- 🤝நன்மையில் பங்கு பெறுவோம். இதை அதிகமாகப் பகிருங்கள். Please share! பஸாஇர் கல்வி நிலையம் - பஹ்ரைன்🇧🇭 --------------------------------------------------------------------------- #Basaer Education, Bahrain