У нас вы можете посмотреть бесплатно VLR RIVERA PRIZE INDIAN TEAM FORMER CAPTAIN MITHALI RAJ SPEECH или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூர் 26-2-26 விஐடி பல்கலை.யில் ரிவேரா கலை விளையாட்டு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியதுமுன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விழாவை துவங்கி வைத்தார் வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரிவேரா 2026 கலை விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று தொடங்கி மார்ச் 1-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிவேரா கலை விழாவை தொடங்கி வைத்தார். அவர் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசினார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பேசுகையில், ஆர்வம் மட்டும் உங்களை எங்கும் கொண்டு செல்லாது. எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் நீங்கள் அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள் என்பதில் சரியான தேர்வுகளைச் செய்து அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, இந்தச் சூழலில், பொறியியல் மாணவர்களாக இருப்பதால், அதுதான் உங்களின் முன்னுரிமை, அதுதான் உங்களின் தொழில். நீங்கள் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக விளையாடலாம். எந்தவொரு உடல் செயல்பாடும் உங்கள் மனதைத் தெளிவாக வைத்திருக்க எப்போதும் உதவும். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் தினமும் சிறிது நேரமாவது விளையாடுவதற்காகச் செலவிட வேண்டும் என்றார் நான் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன் எல்லோருக்குமான என்னுடைய அறிவுரை உங்களுடைய வாழ்க்கையை இலக்கையும் நோக்கி நீங்கள் பயணியுங்கள் யார் எதை சொன்னாலும் கவலைப்படாதீர்கள் நான் விளையாடியதில் சிறந்த கிரிக்கெட் போட்டியாளர் அணி என்றால் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது தான் மேலும் உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய போது வெல்ல முடியவில்லை காரணம் பெரிய நாடுகளின் மகளிர் அணிகளுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்களும் பணம் ஒதுக்கபடுகிறது என பேசினார் மாராத்தான் போட்டிகள் நடைபெற்று முடிந்தது இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மிதாலி ராஜ் பரிசுகளை வழங்கினார்.