У нас вы можете посмотреть бесплатно Narai Konda | நறை கொண்ட மலர் தூவி - தேவாரம் பாடல் - திருமுறை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#முதல்திருமுறை -#தலவரலாறு -#திருஞானசம்பந்தர் #7 #திருச்செங்காட்டங்குடி நாகை, கீழ்வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளுகின்றபோது, இச்செய்தியைச் செவுயுற்ற சிறுத்தொண்டர் ஓடிப் போய் அழைத்துவந்து திருச்செங்காட்டங்குடியைச் சேர்ப்பித்தார். சிறுத்தொண்டரோடு நட்புக்கொண்டு அங்க எழுந்தருளியிருக்கின்ற காலத்துக் கணபதீச்சரம் வழிபடச்சென்றார். கோயிலை வலங்கொண்டார். அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து எழுந்து திருமுன் கைகூப்பி நின்று, சிறுத்தொண்டர் தொழ இருந்த பெருமையைச் சிறப்பித்து ‘நறை கொண்ட மலர் தூவி‘ என்னும் பொங்கியெழும் இசைப்பதிகமாகிய இதனைப் பாடினார். #நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும் முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய, சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள், கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சுரத்தானே. - - - - பொருள் உரை: அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம் கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணி செய்து வழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில் சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும். தலபுராணம்- விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று. மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது. இறைவன் - கணபதீச்சர்த்தார்,கணபதீஸ்வரர்,ஆத்திவணனாதர்,பாஸ்கரபுரீஸ்வரர், இறைவி - திருக்குழல் நன்மாது,சூளிகாம்பாள், விருட்சம் - திருவாத்தி.காட்டாத்தி, தீர்த்தம் - சூர்யதீர்த்தம். மொத்தம் ஒன்பது தீர்த்தம் உள்ளது. பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் கணபதீச்சரமுடைய நாயனார் கணபதீச்சரமுடைய நாயர் எனவும், பைரவமூர்த்தி உத்திராபதி நாயகர் எனவும், சீராளர் சீராள தேவர் எனவும், சிறுத்தொண்டர் ‘சிறுத்தொண்ட நம்பி’ எனவும், விநாயகப்பெருமான் வாதாபி கணபதி எனவும் குறிக்கப் பெறுகின்றனர் சிறுத்தொண்ட நாயனார் அருள் பெற்ற தலம். பைரவ வேடத்தில் சிவனார் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கரியமுது கேட்டு அவருக்கும் , அவரின் மனைவி திருவெண்காட்டு நங்கை , மகன் சீராளதேவர் , அவர் வீட்டின் பணிப்பெண் சந்தன நங்கை முதலியோருக்கும் அருள் செய்த தலம். சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் செய்து வென்று , அங்கிருந்து கொண்டுவந்த விநாயகரை இங்குதான் பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் வாதாபி கணபதி என்றழைக்கப்படுகிறார். மந்திரபுரீசம் , கணபதீஸ்வரம் , சக்திபுரீசம் , இந்திரபுரீசம் , ஆத்திவனம் , பாஸ்கரபுரீசம் என்றெல்லாம் அழைக்கப்படும் தலம். சத்திய தீர்த்தக்கரையில் மங்கள விநாயகர் சந்நிதி ராஜகோபுரத்தின் உட்புறம் ஆத்திமரம் உள்ளது. தலமரமான ஆத்திமரத்தின் அடியில் சிவனார் அமர்ந்திருக்க , சிறுத்தொண்டர் அவரை அமுது உண்ண அழைக்கும் சிற்பம் உள்ளது. அகழி அமைப்புடனான கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்மை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். உட்பிரகாரத்தில் கல்லில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள பிட்சாடனர் , சந்தனநங்கை , சீராளர் , திருவெண்காட்டுநங்கை , சிறுத்தொண்டர் , அறுபத்துமூவர் முதலானோரை காணலாம். பிரம்மன் , அர்த்தநாரீஸ்வரர் , சித்தி விநாயகர் , நால்வர் , சங்க-பதும நிதிகள் முதலானோரின் சந்நிதிகளையும் காணலாம் சத்பாஷாட மகரிஷி , அவர் வழிபட்ட லிங்கத்திருமேனி , வ்ஹ்ரம்மன் வழிபட்ட லிங்கத்திருமேனி , இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாக உத்தராபதீஸ்வரரின் உற்சவத்திருமேனி திகழ்கிறது. இவரே சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கரியமுது கேட்டவர். இத்திருமேனிக்கு நாள்தோறும் பச்சைக்கற்பூரமும் , குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது . பேழையில் மரகதலிங்கம் உள்ளது. தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார். கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த ஐதீக விழ நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்கு தலவரலாறு தொடர்புடைய சிற்பங்கள் உள்ளது இத்தளத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி என்னும் பிரசாதம் , அமுது படையல் ஐதீகவிழா நாளன்று மட்டுமே பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றது. மக்கட்பேறு இல்லாதவர்கள் , இப்பிரசாதத்தை உத்தராபதியாரை வழிபாட்டு சாப்பிட்டால் புத்திரப்பேறு அடையப் பெறுவார் என்ற வரலாறு சொல்லப்படுகிறது. திருவாரூரில் இருந்து 13கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் சன்னாநல்லூர் உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ., சென்றால் திருப்புகலூரை அடையலாம். நாகப்பட்டினம், கும்பகோணம் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது. இங்கிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. #ஓதுவார் #ஒதுவார்மனோகர் #ஒதுவார்_மனோகர்