У нас вы можете посмотреть бесплатно VLR PWD MINISTER EV VELU INSPECTION THANGUM VIDUTHI BYTE или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூர் 9-2-26 தமிழகத்தில் கிராம அனுகு சாலைகள் 95 சதவிகிதம் பணிகள் முடித்து 1100 சிறுபாலங்களை இந்த நான் கரை ஆண்டுகளில் கட்டி கொடுத்திருக்கிறோம் -11 ரயில்வே மேம்பாலங்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ, வேலு பெருமுகையில் பேட்டி ___________________________________________ வேலூர்மாவட்டம்,பெருமுகையில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 46 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படுகிறது இந்த கட்டுமான பணிகள் தமிழக பொதுப்பணி மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார் உடன் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் பின்னர் அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் வெளிமாநில நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 46 கோடியில் நவீன வசதிகளுடன் உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி கட்டபடுகிறது இது பணிகள் முடிந்தால் வரும் 28 ஆம் தேதிக்குள் திறக்க வாய்ப்புள்ளது அதன் பின்னர் தான் இது எந்த துறையிடம் ஒப்படைப்பது என முதல்வர் முடிவு எடுப்பார் தமிழகத்தில் கிராம அனுகு சாலைகள் அமைப்பது 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது இன்னும் 5 சதவிகிதம் மட்டுமே பாக்கி உள்ளது கிராம அனுகு சாலைகள் தரமாக போடப்பட்டுள்ளது இந்த அனுகு சாலை மூலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தரைபாலங்கள் ஓடைகள் சிறு நதிகளின் பாலங்கள் போன்றவைகள் எல்லாம் 1100 மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது இன்னும் 5 சதவிகிதம் பணிகள் செய்யபடவுள்ளது அதையும் செய்து முடிப்போம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகபடுத்தவில்லை என கூறுவது தேர்தலை மனதில் வைத்து சொல்கிறார் எங்கு எதை பார்த்தார் என தெரியவில்லை எங்கெங்கு என குறிப்பிட்டு மத்திய அமைச்சர் கூறினால் வருவாய்த்துறை மூலம் நிலங்களை கையகப்படுத்தி தர தமிழக அரசு தயாராக உள்ளது ரயில்வே மேம்பாலங்கள் 70 அமைக்க அறிவிப்பு வெளியிட்டு அதில் 11 மேம்பாலகளுக்கு நிதித்துறை நிதி ஒதுக்காததால் கிடப்பில் உள்ளது மீதமுள்ள எல்லா பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு சர்வீஸ் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தி திறப்பு விழாவும் செய்துவிட்டோம் வேலூர் மாவட்டத்தில் மேல்பட்டி,கூடநகரம் ஆகிய இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டு வேலூர் போக்குவரத்து நெரிசலை குறைக்க சன்பீம் முதல் அரப்பாக்கம் வரையில் சுற்றுசாலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது வேலூரில் பறக்கும் சாலை அமைக்க சாத்தியமில்லை என கூறினார் பேட்டி:எ.வ.வேலு (பொதுப்பணித்துறை அமைச்சர்)