У нас вы можете посмотреть бесплатно அன்னை தமிழ் மன்றம் நடத்திய பொங்கல் திருவிழா - ஒரு தொகுப்பு உங்களுக்காக... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பஹ்ரைனில் பல்வேறு சமுக சேவைகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பஹ்ரைன் கேரளீய சமாஜத்தில் வைத்து 16/01/2025 வெள்ளிக்கிழமை, பஹ்ரைன் வாழ் தமிழ் உறவுகளோடு இணைந்து கொண்டாடியது. இந்த மாபெரும் பொங்கல் திருவிழாவில் காலை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் ஸ்ரீ. ராஜீவ் குமார் மிஸ்ரா அவர்களும் இரண்டாம் நிலைச் செயலாளர் மதிப்பிற்குறிய செல்வி. நிவேதா அவர்களும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த வடக்கு மண்டல ஆளுநரகத்தில் உள்ள முதலீட்டுத்துறையின் தலைவர் திரு. இசாம் ஈசா அல்கயாத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களோடு பஹ்ரைன் கேரளீய சமாஜத்தின் தலைவர் திரு. P.V. ராதாகிருஷ்ணன் பிள்ளை மற்றும் கொடையாளர்கள் பலரும் கலந்து கொண்டு விழா நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர். சுமார் 25 குடும்பங்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலப் போட்டியில் பங்கு பெற்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மிக பிரமாண்டமான கும்மி நடனத்தை அரங்கேற்றினர். சிறுகுழுந்தைகள் உற்சாத்தோடு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுமார் மூவாயிரம் மக்களுக்கு அறுசுவை விருந்து தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது. தமிழர்கள் அனைவரும் சங்கமித்து இந்த விழாவில் எல்லையில்லா சந்தோஷஷத்தை பகிர்ந்து கொண்டனர். மாலை ஏழு மணியளவில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி உள்ளரங்கில் வைத்து நடைபெற்றது. விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் செல்வி. ஸ்ரீநிஷா மற்றும் சாம் விஷால், ஜான் ஜெரோம் ஆகியோர் மற்றும் பேச்சலர்ஸ் பேண்ட் இசைக்குழு இணைந்து நடத்திய பிரம்மாண்டமான இசைக் கச்சேரி மற்றும் கலைமாமணி. திரு. கோவிந்தராஜ் அவர்களின் கலை நிகழ்வு, இவர்களோடு சவுதி அரேபியாவைச் சேர்ந்த திரு. அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு தமிழ் பாடல்களைப்பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். மேலும் பஹ்ரைனில் வசிக்கும் திருமதி. சோபனா சிவா மற்றும் செல்வி. தனுஸ்ரீ ரமேஷ் ஆகியோர் இவர்களோடு இணைந்து பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். இரவு 11 மணிவரை நடைபெற்றது. பஹ்ரைன் வாழ் தமிழர்கள் அனைவரும் இசைமழையில் நனைந்து நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையல்ல.