Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб WHICH IS ANNADHANAM / எது அன்னதானம் TAMIL KAVITHAI - அர்த்தமுள்ள கவிதை в хорошем качестве

WHICH IS ANNADHANAM / எது அன்னதானம் TAMIL KAVITHAI - அர்த்தமுள்ள கவிதை 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



WHICH IS ANNADHANAM / எது அன்னதானம் TAMIL KAVITHAI - அர்த்தமுள்ள கவிதை

#tamilinspirationalspeech பசியால் பள்ளத்தாக்கான கன்னங்கள். முற்றிலும் மறைந்துவிடாமல் முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு. "பசியால் பள்ளத்தாக்கான கன்னங்கள். "முற்றிலும் மறைந்துவிடாமல் முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு". கிழிந்த கால்சட்டையும், கையில் தட்டுமாய் நின்ற அவ்வெட்டு வயதுச் சிறுவனின் இடுங்கிய கண்களில், .....ஏக்கமாய் ஒரு நம்பிக்கை! "அவ்வெட்டு வயதுச் சிறுவனின் இடுங்கிய கண்களில் ஏக்கமாய் ஒரு நம்பிக்கை! நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற நிச்சயமான நம்பிக்கையில்  நடுங்கிய கைகளால், காணாத வயிற்றை தேடித்தடவி - ஆறுதல் அளித்தான். “இதோ கூடை கூடையாய் அன்னமும் அதை அளக்க ஆட்களும் வந்தாயிற்று. சற்றே பொறுத்துக்கொள்" மூன்று மணிநேரம் முட்டிய அலையில் இன்னும் கசங்கி இயலாத நிலையிலும் வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி முந்தி அடித்து முன்னேறிப் போகையில் கூட்ட நெரிசலில் கைத்தட்டை தொலைத்தான். பதட்டப்படாமல் பக்குவப்பட்டவனாய், இரு கை உள்ளதே! இதிலுணவு கிட்டினால் போதுமென்றெண்ணி முன்னே சென்று கையேந்திய போது- சட்டென விட்டதே ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான். உடன் பிடித்தது ஒருகை, அதனால் உணவு பெற்றதோ, ஒற்றைக்கை. இருந்தும் மலர்ந்தான்! இந்த ஒரு பிடிச் சோறு, அவன் மூன்று மணிநேரம் முயன்று பெற்ற வெற்றி. கடும் உழைப்பின் ஊதியம். "நடக்கும் அனைத்தையும், காருக்குள் அமர்ந்து ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது, அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின் "கர்வக்கண்கள்". பசியால் பள்ளத்தாக்கான கன்னங்கள். முற்றிலும் மறைந்துவிடாமல் முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு. "பசியால் பள்ளத்தாக்கான கன்னங்கள். "முற்றிலும் மறைந்துவிடாமல் முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு". கிழிந்த கால்சட்டையும், கையில் தட்டுமாய் நின்ற அவ்வெட்டு வயதுச் சிறுவனின் இடுங்கிய கண்களில், .....ஏக்கமாய் ஒரு நம்பிக்கை! "அவ்வெட்டு வயதுச் சிறுவனின் இடுங்கிய கண்களில் ஏக்கமாய் ஒரு நம்பிக்கை! நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற நிச்சயமான நம்பிக்கையில்  நடுங்கிய கைகளால், காணாத வயிற்றை தேடித்தடவி - ஆறுதல் அளித்தான். “இதோ கூடை கூடையாய் அன்னமும் அதை அளக்க ஆட்களும் வந்தாயிற்று. சற்றே பொறுத்துக்கொள்" மூன்று மணிநேரம் முட்டிய அலையில் இன்னும் கசங்கி இயலாத நிலையிலும் வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி முந்தி அடித்து முன்னேறிப் போகையில் கூட்ட நெரிசலில் கைத்தட்டை தொலைத்தான். பதட்டப்படாமல் பக்குவப்பட்டவனாய், இரு கை உள்ளதே! இதிலுணவு கிட்டினால் போதுமென்றெண்ணி முன்னே சென்று கையேந்திய போது- சட்டென விட்டதே ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான். உடன் பிடித்தது ஒருகை, அதனால் உணவு பெற்றதோ, ஒற்றைக்கை. இருந்தும் மலர்ந்தான்! இந்த ஒரு பிடிச் சோறு, அவன் மூன்று மணிநேரம் முயன்று பெற்ற வெற்றி. கடும் உழைப்பின் ஊதியம். "நடக்கும் அனைத்தையும், காருக்குள் அமர்ந்து ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது, அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின் "கர்வக்கண்கள்".

Comments