У нас вы можете посмотреть бесплатно மஹாலக்ஷ்மி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய இப்படி அழைத்து பாருங்கள்! Lakshmi Geetopacharam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#mahalakshmi #friday #lakshmi #geethopacharam #mahalakshmigeethopacharam #lakshmigitopacharam #navarathri #lakshmipuja #lakshmi #lakshmidevi #lakshmipooja #poojasong #ஸ்ரீமஹாலக்ஷ்மி_கீதோபசாரம் சாஸ்த்ரோக்த பூஜை செய்வார் சிலர் வேதோக்த பூஜை செய்வார் சிலர் .... லக்ஷ்மீ தேன் போல் இந்த கானத்தைப் பாடி நாங்கள் கீதோபசாரம் செய்வோம். (1) ** அழகு சொட்டும் உந்தன் முகத்தை மனதில் நாங்கள் தியானம் செய்து .... லக்ஷ்மீ உந்தன் சக்தி வந்திடவே நாங்கள் ஆவாஹனம் செய்திடுவோம். (2) த்யாயாமி, ஆவாஹயாமி. ரத்தினசிம்மாஸனத்திற்கு நாங்கள் எங்கு செல்வதம்மா .... லக்ஷ்மீ இந்த சிறு ஆசனத்தை நீயும் அன்புடனே ஏற்றுக் கொள்வாய். (3) ரத்ன சிம்மாஸனம் ஸமர்ப்பயாமி. கால் அலம்ப பாத்யம் நாங்கள் உனக்கு சுத்தமாகக் கொண்டுவந்து .... லக்ஷ்மீ பவித்ரமான உந்தன் பாதங்களை சுத்தம் செய்து அலங்கரிப்போம். (4) பாதயோஹோ பாத்யம் ஸமர்ப்பயாமி. மணம் கமழும் சுத்த ஜலத்தினால் நல்ல சந்தனமும் பூக்களும் சேர்த்து .... லக்ஷ்மீ அனுக்ரஹிக்கும் உந்தன் கரங்களில் நாங்கள் அர்க்க்யம் இதைக் கொடுத்திடுவோம். (5) அர்க்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமனீயம் செய்வதற்கு ஜலம் மூன்று முறை அளித்திடுவோம் .... லக்ஷ்மீ மூன்றுவித பாபங்களைப் போக்க ஜலத்தை மூன்று முறை அருந்திடுவாய். (6) ஆசமனீயம் ஸமர்ப்பயாமி. மங்களங்கள் எங்கள் க்ருஹத்தில் எப்பொழுதும் நடந்துவர .... லக்ஷ்மீ பசுவின் பாலில் தேனை விட்டு நாங்கள் மதுபர்க்கம் ஸமர்ப்பிக்கின்றோம். (7) மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி. ஏலக்காயும் குங்கும்ப் பூவும் நல்ல பச்சைக் கற்பூரமும் மணக்கும் .... லக்ஷ்மீ தீர்த்தத்துடன் கங்கை கலந்து நாங்கள் ஸ்நானம் செய்ய ஸமர்ப்பிக்கின்றோம். (8) ஸ்நானம் சமர்ப்பயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.5.46 சின்னஞ்சிறு பட்டு வஸ்திரங்கள் உந்தன் மேனியிலே சாற்றிடுவோம் .... லக்ஷ்மீ உந்தன் மேனி ஜ்வலிப்பது போல் எங்கள் குடும்பமெல்லாம் ஜ்வலித்திடும். (9) வஸ்த்ரோத்தரீயம் ஸமர்ப்பயாமி. பூணூலுடன் ஆபரணமும் உந்தன் சிவந்த மேனி பளபளக்க .... லக்ஷ்மீ ஐச்வர்யங்கள் நிலைத்திடவே நாங்கள் உனக்குச் சாற்றி மனம் மகிழ்வோம். (10) ஆபரணான் ஸமர்ப்பயாமி. க்ருஹத்திலுள்ள பெண்களுக்கெல்லாம் என்றும் ஸௌபாக்கியங்கள் நிலைத்திடவே .... லக்ஷ்மீ சந்தனமும் குங்கும்ப் பொட்டும் நல்ல அக்ஷதையுடன் அலங்கரிப்போம். (11) ** கந்தாக்ஷதான் ஸமர்ப்பயாமி. கனகாம்பரமும் முல்லை மொட்டும் உனக்கு கலந்து நல்ல ஹாரம் கட்டி .... லக்ஷ்மீ கல்யாணங்கள் நடந்து வர உந்தன் கழுத்தினிலே அணிவிக்கின்றோம். (12) புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி, புஷ்பை: பூஜயாமி. தசாங்கத்தின் வாசனையுள்ள நல்ல சந்தனத்தின் மணத்துடனே .... லக்ஷ்மீ நானாவித புஷ்பமும் மணக்கும் தூபம் உனக்குக் காட்டுகின்றோம். (13) தூபம் ஆக்ராபயாமி. ஸுமங்கலியைக் காக்குமிந்த நல்ல ஆஜ்யதீபம் காட்டிடுவோம் .... லக்ஷ்மீ எங்கள் குலதீபத்தைநீயும் என்றென்றுமே ரக்ஷித்திடுவாய். (14) ** தீபம் தர்சயாமி, தூபதீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி. கனிகளுடன் பாயசமும் நல்ல பக்ஷணங்களும் பஞ்சாம்ருதமும் .... லக்ஷ்மீ மந்திரம் சொல்லி ஊட்டுவோருக்கு என்றும் அன்னபூரணி அனுக்ரஹிப்பாள். (15) நைவேத்யம் நிவேதயாமி, மத்யே மத்யே அம்ருதபானீயம் ஸமர்ப்பயாமி.. ஆசமனீயம் ஸமர்ப்பயாமி. ஐந்து எண்ணில் குறைவில்லாமல் நல்ல வெற்றிலையும் பாக்கும் வைத்து .... லக்ஷ்மீ ரக்தம் போல் உந்தன் திருவாய் சிவக்க இந்த தாம்பூலத்தை ஸமர்ப்பிக்கின்றோம். (16) கற்பூர தாம்பூலம் நிவேதயாமி, ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி. பஞ்ச மஹா பாதகங்களும் கணப்பொழுதில் தீரும் இந்த .... லக்ஷ்மீ பஞ்சாலத்தி ஆராதனையை நீயும் மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய். (17) ** பஞ்சமுக தீபம் ஸமர்ப்பயாமி. ஹாரத்தியில் கற்பூரம் வைத்து இங்கு வேத வாத்தியம் முழங்கிடவே .... லக்ஷ்மீ குற்றம் குறை அழிந்திடவே இந்த ஹாரத்தியை ஏற்றுக் கொள்வாய். (18) கற்பூர நீராஜனம் தர்சயாமி, ஆசமனீயம் ஸமர்ப்பயாமி, ரக்ஷான் தாரயாமி. ஶ்ரீம் என்னும் மந்திரத்தைச் சொல்லி நாங்கள் மந்த்ரபுஷ்பம் அளித்திடுவோம் .... லக்ஷ்மீ ஸுவர்ணபுஷ்ப பாரிஜாதாதி ச்சத்ர- சாமராதிகளை ஸமர்ப்பிக்கின்றோம். (19) மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி, ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி, பாரிஜாதபுஷ்பம் ஸமர்ப்பயாமி, ச்சத்ர சாமராதௌ ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி. யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச...லக்ஷ்மீ தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே. (20) ** மந்திரத்தைச் சொல்லி நாங்கள் ஆத்மாவை ப்ரதக்ஷிணம் செய்தோம் .... லக்ஷ்மீ பூர்வஜன்ம பாபங்களெல்லாம் நாளடைவில் குறைந்திடுமே. (21) அஞ்சலி முத்திரை செய்துகொண்டு நாங்கள் நமஸ்கரித்து வேண்டுகின்றோம் .... லக்ஷ்மீ இப்பேர்பட்ட சுபதினத்தில் ஆசிகளை நீயும் பக்தர்களுக்குக் கொடுத்திடுவாய். (22) ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி. நோய் நொடிகள் தீரவேண்டும் எங்கள் உத்தியோகங்களைக் காக்க வேண்டும் .... லக்ஷ்மீ பக்தர்களாக வாழ வேண்டும் நாங்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும். (23) ** ப்ரார்த்தனாம் ஸமர்ப்பயாமி. உந்தன் வரவைக் காணாமல் மற்ற தேவரெல்லாம் காத்திருக்கார் .... லக்ஷ்மீ புனராகமனம் பவது என்று நாங்கள் மங்களத்தைப் பாடுகின்றோம்.(24) ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி. க்ஷேமார்த்தே புனராகமனாய ச. ஹாரத்தி. மங்களங்கள் எங்கள் க்ருஹத்தில் எப்பொழுதும் நடக்க வேண்டும் .... லக்ஷ்மீ மங்கள வாத்தியம் மங்கள வார்த்தைகள் எங்கள் காதுகளில் என்றும் ஒலிக்க வேண்டும். (25) *** மங்களகரமாய் முடித்து வைத்தாய் நீயும் மங்களம் பாட வைத்தாய் .... லக்ஷ்மீ பாடுங்கள் மங்களம் எல்லோரும் மங்களம் ஜெய மங்களம் ஜெய மங்களம். (26) ** வேதோக்த பூஜை செய்வார் சிலர் சாஸ்த்ரோக்த பூஜை செய்வார் சிலர் .... லக்ஷ்மீ தேன் போலிந்த கானத்தைப் பாடி நாங்கள் கீதோபசாரம் செய்தோம். (27) //. சுபம் .//