У нас вы можете посмотреть бесплатно சாய் வேதம் என்ன சொல்கிறது |சீரடிக்கு வரும் பக்தர்கள் என்னிடம்உள்ள குப்பையைமட்டுமேஎடுத்துசெல்கின்றனர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தொகுப்பாளர் சாய் ஸ்மிதா ஆனந்த், ஓம் சாய்ராம் சாய் வேதம் என்ன சொல்கிறது? பாபா அவருடைய பக்தர்களிடம் சொல்கின்ற மிக முக்கியமான வார்த்தைகள்... அதாவது சாயின் வேதம் நமக்கு என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம். பாபா அடிக்கடி மராத்தி மொழியில் சொல்லும் வார்த்தை என்ன தெரியுமா? என்னுடைய பண்ணையில் அளவிட முடியாத பெரிய அளவில் பொக்கிஷங்கள், கஜானாக்கள் திறந்தே இருக்கின்றன.. இந்த பொக்கிஷங்களை எல்லோரும் அவர்களுடைய மாட்டு வண்டிகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிரப்பி கொண்டு எடுத்துச் செல்லங்கள் என்பார்.. ஆனால் யாருமே இந்த பொக்கிஷங்களை எடுப்பதற்கு வருவதில்லை.. யாரெல்லாம் சீரடிக்கு வருகிறார்களோ அவர்கள் என்னிடம் கந்தல்களையும் , கிழிந்த துணிகளையும் அதாவது குப்பைகளை மட்டுமே என்னிடத்தில் கேட்கின்றனர் என்றார். என்னுடைய குழந்தைகள் அதாவது அவருடைய பக்தர்கள் தன்னிடத்தில் இருக்கும் அந்த பொக்கிஷங்களை கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக பாபா கூறினார். இது வெறும் பாபாவின் வார்த்தைகள் மட்டுமல்ல ...இந்த வார்த்தைகளுக்கு மிக ஆழமான அர்த்தம் இருக்கிறது. பாபா நமக்கு சொல்வது என்னவென்றால்..இந்தக் கந்தல்கள் , குப்பைகள் எல்லாமே நமக்கு பிரயோஜனமானது கிடையாது ... நம்முடன் என்றைக்கும் வரப்போவதும் கிடையாது.. மக்கள் என்னிடத்தில் வந்து கேட்கும் இந்த கந்தல்களும் , குப்பைகளும் என்றுமே நிலையானது கிடையாது.. நிறைய மக்கள் என்னிடத்தில் வந்து அவர்களுடைய தேவைகள், முக்கியமாக பொருள் சார்ந்த தேவைகள் நிறைவேறுவதற்காக வருகின்றனர். ஆனால் யாருமே உண்மையான அந்த பொக்கிஷத்தை , நிலையான சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய அந்த பொக்கிஷத்தை கேட்பதில்லை .. அதைக் கொண்டு செல்வதற்கான தகுதியான மனிதர் என்னிடத்தில் வருவதில்லை , அதை கொண்டு செல்ல முயற்சி கூட எடுப்பது கிடையாது என்றார் . பாபா எதை குறிப்பிடுகிறார்? அவர் சொல்வது எல்லாம் ஆன்மீக பொக்கிஷம் , பக்தி மார்க்கத்தில் செல்கின்ற பொக்கிஷத்தை பற்றி சொல்கிறார். ஒவ்வொரு மனிதரும் ஆன்மீக பாதையில் சென்று அதில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்து , அதன் மூலமாக முக்தி அடைய வேண்டும் என்றார் .. நாம் பாபாவிடம் என்ன கேட்க வேண்டும் அல்லது எதிர்பார்க்க வேண்டும் , பாபா எப்படிப்பட்ட பக்தியை தன்னுடைய குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்க்கிறார் ? நாம் சாதாரணமாகவே சிரடிக்கி செல்லும் போது நிறைய எண்ணங்களுடன் , மன வேதனைகளுடன் செல்வதுண்டு. நாம் நிறைய பிரச்சினைகளில் இருக்கிறோம் .. நம்முடைய தேவைகள் மிக அதிகமாக இருக்கிறது.. அதை எல்லாம் அடைவதற்கு மிகவும் சிரமப்படுகிறோம்.. பாபாவிடம் சென்று அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கலாம் என்று நினைப்போம்.. பாபா மிகவும் தயாள குணம் உள்ளவர் ,நாம் கேட்கும் எல்லா கோரிக்கைகளையும் நம்முடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பார் என்று எண்ணுவதுண்டு பாபாவும் அவருடைய பக்தர்கள் கேட்பதை அன்றைக்கும் சரி , இன்றைக்கும் சரி கொடுத்து விடுவார். நல்லது கெட்டதை அறியாத நாம் அவரிடம் எல்லாவற்றையும் கேட்போம். ஆனால் பாபா நமக்கு எது நன்மை கொடுக்குமோ அதை மட்டுமே வழங்குவார். ஆனால் ஏன் பாபாவிடம் எதையும் கேட்க வேண்டும்? என்ன அவசியம் இருக்கிறது? அப்படியே கேட்டாலும் அவரிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? எதையும் கேட்காமல் நமக்கு கொடுப்பவர் சாய்நாதர் ஆனால் நாம் எதை அவரிடம் கேட்க வேண்டும் எதைக் கேட்கக் கூடாது என்பதை நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும் ஆர்தர் ஹஸ்பர்ன் அவர்களின் புத்தகத்தில் பாபா கூறியதாக சில வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. "என்னிடத்தில் பக்தர்கள் கேட்பதை எல்லாம் நான் கொடுத்து விடுகிறேன்" ... இதனால் நான் என்ன வழங்குகிறேனோ அதனை பெறுவதற்கு பக்தர்கள் விரும்புகின்றனர். அவர்களுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் பூர்த்தி செய்வேன் , ஆனால் சிறிது காலம் கழித்து என்னிடத்தில் அவர்கள் கேட்டது அனைத்தும் தேவையற்றது என்பதையும், பிரயோஜனமற்றது என்பதையும் உணர்வார்கள். அப்படியே அவர்களுக்கு அது பிரயோஜனமாக இருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுக்க இருக்குமே தவிர அவர்களுடைய இறப்புக்கு பின்னால் இருக்காது என்பதை உணர்வார்கள் என்கிறார் பாபா.. பக்தர்கள் அவர்களின் பக்தியின் சக்தியின் மூலமாக பாபாவை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றார்.. என்னிடம் இருக்கும் நிறைய பொக்கிஷங்கள் உனக்கான அந்த நிலையான சந்தோஷத்தையும் , சுய ஆனந்தத்தையும் , உயர்ந்த ஞானத்தையும் வழங்கும். இதை பெறுவதற்கான ஒரு தகுதியை பக்தர்கள் அடைய வேண்டும். அதை விட்டுவிட்டு பொருள்சார் விஷயங்கள், திருமணம், வேலை, குழந்தைகள் ,என்றும் நிலையில்லாத ஒன்றை அடைய முயற்சி செய்யாதே என்றார். பாபா நாம் கேட்பதை கொடுத்து விட்டாலும் பின்னர் மெது மெதுவாக நாம் அவரிடம் கேட்ட எல்லா பொருட்களும் தேவையற்றது என்பதை உணர்வோம் என்றார் இதையெல்லாம் அறிந்த பின்னர் நாம் பாபாவிடம் இறுதியாக கேட்பது சுய நிம்மதியை தான்.. இதற்கு ஒரு சரியான உதாரணமாக ஒரு மகாபக்தரை சொல்லலாம் அவர்தான் திரு ஜோதிந்திரா தார்க்கத். அக்டோபர் எட்டாம் தேதி 1918 ஆம் வருடம் , அதாவது பாபாவை பார்க்க வந்த புலி பாபாவின் அனுக்கிரகத்தால் ஆசீர்வாதத்தால் அவருடைய தாமரை பாதத்தை அடைந்த அதே நாள் நடந்த ஒரு சம்பவம்.. பாபாவுடைய இறுதி நாட்களில்.. அவருடைய மகா சமாதி அடைவதற்கான ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வு.. பாபா உணவையும் , தண்ணீரையும் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டார். பாபா உடைய அந்த பொக்கிஷத்தை பெறுவதற்கான முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.. பாபா அவருடைய பொக்கிஷத்தை கொடுக்க தயாராக இருக்கும்பொழுது, அதைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக நாமளும் அடைய அவர் மேல் அதீத பக்தியை வளர்த்துக் கொள்வோம்.. நன்றி ஜெய் சாய்ராம் #saibabaaarathi #stavanamanjari #அற்புதங்கள் #சாய்பாபா #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #saibabasongs #மந்திரம்