У нас вы можете посмотреть бесплатно உதவித்தொகை ரூ.15,000 வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலால் கைது! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மற்ற மாநிலங்கள் வழங்குவதைப் போல உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுக்கா கமிட்டியின் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்கள் வழங்கும் அதிகபட்ச உதவி தொகையை போல் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகையை ரூபாய் 15 ஆயிரத்திற்கு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், இன்றைக்கும் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூபாய் 1500 மட்டும் தான் வழங்கப்படுகிறது. தெலுங்கானா ஒரிசா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 6000 முதல் ரூபாய் 15,000 வரை உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் படுத்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. #KPR #DifferentlyAbled #Arrest #Protest #kilpennathur #tamil #tiruvannamalai #news #tiruvannamalaidistrictnews #tamillanguage #demonstration