У нас вы можете посмотреть бесплатно நெல்லை நாங்குநேரியில் நம்பிக்கையும் அச்சம் இன்றி வாக்களிக்க ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து பகுதியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி. பிரசண்ண குமார், IPS., அவர்கள் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் பதட்டமான இடங்களில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி கமாண்டர் பசந்த் யாதவ் தலைமையில் 85 வீரர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் நாங்குநேரியில் பதட்டமான பகுதிகளான பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகளில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர். பெரும்பத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி. பிரசண்ண குமார், IPS., அவர்கள் தலைமையில் நாங்குநேரி தாசில்தார் திரு. பாலகிருஷ்ணன், செல்வி. தர்ஷிகா நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர், நாங்குநேரி உட்கோட்டம், எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் திரு. பசந்த் யாதவ், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் ஆகியோர் சேர்ந்து பொதுமக்களிடையே அச்சத்தை போக்கி பாதுகாப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைதியாக ஊர்வலமாக சென்றனர். #திருநெல்வேலி_மாவட்ட_காவல்துறை #நாங்குநேரி #கொடி_அணிவகுப்பு #எல்லை_பாதுகாப்பு_படை #BSF #தேர்தல்_பாதுகாப்பு #சட்டமன்ற_தேர்தல்_2026 #பாதுகாப்பான_வாக்குப்பதிவு #மக்கள்_பாதுகாப்பு #நெல்லை_போலீஸ் #FlagMarch #ElectionSecurity #TNAssemblyElection2026