У нас вы можете посмотреть бесплатно பிப்ரவரி - 8 அனுதினமும் தேவனோடு : *நிலையான வெற்றி* или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!! பிப்ரவரி - 8 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அனுதினமும் தேவனோடு : இன்றைய தலைப்பு : நிலையான வெற்றி 📘 “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து,... பெருகவே பெருகப் பண்ணுவேன்.” (ஆதியாகமம் 22:17) ஆசீர்வாதத்தின் அடிப்படை: மனுஷ ஜாதியான சகல ஜனங்களும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் ஒன்றே ஆசீர்வாதமாகும். இதற்காக ஜனங்கள் பலவிதத்தில் பிரயாசங்களை மேற்கொள்வார்கள். உங்கள் வாழ்க்கையானது ஆசீர்வதிக்கப்பட்டதாக காணப்படுகிறதா? ஆசீர்வாதத்திற்கு எதிர்சொல்லான சாபமான வாழ்வை தான் வாழ்கிறீர்களா? ஆசீர்வாதத்தின் வாசல்கள் அடைபட்டுப்போனதா? கவலைவேண்டாம். காத்திருக்கிற உங்களுக்கு கனமான ஆசீர்வாதத்தை தேவன் தந்திடுவார். யோபுவை போல வாழ்வு சாபமாயிருந்தாலும், நாம் இயேசுவிடம் சார்ந்து கொள்வோம். தாமதமாகக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் இரட்டிப்பான பலனை தரும். ஒரு மனுஷனுக்கு உலகத்தின் மிக பெரிய ஆசீர்வாதம், ஆவியின் ஆசீர்வாதமாகிய இரட்சிப்பும், ஆத்தும ஆசீர்வாதமாகிய பரிசுத்தமுமே. மேலும், ஆசீர்வாதமானது நினைக்கும் நேரத்தில் கிடைப்பதல்ல, நினைத்திரா நேரத்தில் கிடைப்பதாகும். கர்த்தரின் கரத்தால் புதுத் துவக்கம்: ஆபிரகாம் 100 வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வேன் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஆனால், ஒருவரும் எதிர்பாராத ஆசீர்வாதத்தை தேவன் அருளிச் செய்தார். முடியாது என்று முடிவுக்கு கொண்டுவந்த காரியங்களையும் தேவன் ஆசீர்வதித்து புது தொடக்கத்தை தருவார். நடக்காது என்று நினைத்தவைகள் அவர் கரத்தால் நடந்திடும். தடையாய் நிற்கும் மதில்கள் தரையாய் மாறி வழி திறக்கும். கர்த்தருக்குப் பயந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்த ஆபிரகாமை போல நாமும் கீழ்ப்படிந்து வாழும்போது மூடின வாசல்களை திறந்திடுவார். புது ஆசிகளால் நிரப்பிடுவார். நம் வாழ்க்கையிலும் ஆசீர்வாதத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கலாம், தொட்டதெல்லாம் தோல்வியாகவும் இருக்கலாம். ஆனால், இன்றே உங்களை ஆசீர்வதிப்பேன் என்று வாக்களித்தவர் வாக்குமாறாதவர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் தாமே நம்மையும் ஆசீர்வாதத்தின் பாதையில் வழிநடத்துவாராக. எனவே, கர்த்தரின் ஆசீர்வாதத்தில் மலர்ந்திடுவோம். ஆர்ப்பரித்து என்று மகிழ்ந்திடுவோம்!ஆமென். ****************************