У нас вы можете посмотреть бесплатно 🔴LIVE: பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
TN - DIPR. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளைத் தெரு மற்றும் தண்ணீர்தொட்டி தெருவில் பங்கேற்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிள் (1) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அண்ணா பிள்ளைத் தெருவில் 18.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “முதல்வர் திருமண மாளிகையினை திறந்து வைத்து, 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்”. (2) அண்ணா பிள்ளைத் தெருவில் 8.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “மாநகராட்சி அச்சகத்தினை திறந்து வைக்கிறார்கள். (3) அண்ணா பிள்ளைத் தெருவில் 9.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 'முதல்வர் விளையாட்டுத் திடலினை' திறந்து வைக்கிறார்கள் (4) தண்ணீர் தொட்டித் தெருவில் 9.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 'இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தினை' திறந்து வைக்கிறார்கள். (5) தண்ணீர் தொட்டித் தெருவில் 133 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட 'முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்', பெருங்களத்தூரில் 4.73 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ஆகிய முடிவுற்றப் பணிகளை திறந்து வைக்கிறார்கள். மேலும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் உள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 3.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், வியாசர்பாடி, கக்கன்ஜி நகரில் 10.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், தண்டையார்பேட்டையில் 16.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் அம்பத்தூர், வெங்கடாபுரம், தெற்கு பூங்கா தெருவில் அமைந்துள்ள முழுநேர கிளை நூலகத்தில் 6.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ஆகிய 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, விழாப் பேருரை ஆற்றுகிறார்கள்.