У нас вы можете посмотреть бесплатно இலக்கியம்,சமய நல்லிணக்கம் ,சமூக சேவை | Dr.K.V.S.ஹபீப் முஹம்மத் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வள்ளல் சீதக்காதி அறக்கட்டளையின் 2023ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி. சென்ற 26/08/2023 சனிக்கிழமை மாலை 6 மணி.... சென்னை ராஜா அண்ணாமலைபுரம் - முத்தமிழ் பேரவை அரங்கில் நீதியரசர் G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாயப் பெருவணிகராகவும், பெருவள்ளலாகவும் வாழ்ந்த பெருந்தகை B.S. அப்துல் ரஹ்மான் அவர்களை நிறுவனராகக் கொண்ட இந்த அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நிறுவனர் குடும்ப அங்கத்தினர்களாக ஜனாப் காலித் A.K. புகாரி, ஜனாப் அஷ்ரஃப் அப்துல் ரஹ்மான் புகாரி ஆகியோரின் வருகை சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 'சமய நல்லிணக்க விருது' டாக்டர் KVS. ஹபீப் முஹம்மது அவர்களுக்கும், 'தமிழ் இலக்கிய விருது' தக்கலை பஷீர் அவர்களுக்கும் வழங்கப்பட்டன. கவிஞர் திரு. வீரபாண்டியன், திரையுலகக் கலைஞர் திரு. ராஜேஷ், செயலாளர் ஜனாப் S.S. ஷாஜஹான், ஜனாப் MKE. உமர் அப்துல் காதர், ஜனாப் VNA.ஜலால் ஆகியோரின் உரைகள் இடம்பெற்று விருதாளர்கள் ஏற்புரை ஆற்றினர். ஆலிம் பெருந்தகை முனைவர் P.S. செய்யது மஸ்வூது ஜமாலி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. #manudavasantham #drkvshabeebmuhammed #seethakathitrust