У нас вы можете посмотреть бесплатно 228 கீர்த்தனை | உன்றன் திருப்பணியை | unran thirupaniyai | michael samraj | composer thought или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
michaelsamraj@gmail.com நண்பர்களே! நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள் மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது. சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன். கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள். தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். W.Michael Samraj பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு - உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின்[1] பொருட்டோ, மேலவர் நிமித்தமே வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ் அடைந்து ப்ரகாசிக்கவோ? ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன் நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? - உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப் பான முணவுபிந்த பலபிணி வருமென்ற பயத்தாலே நித மஞ்சினேன்; கானகம்[2] மலைசென்று கடும்பணி குளிர் வென்று போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு. - உன்றன் 3. காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக் கஸ்தி மிகவே அடைந்து,-உடல் பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும், பகைவர் திருடர் மோசமும், சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய் ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. - உன்றன் 4. வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய இசைந்தென் மனது நாடுதே; ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று, நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு. - உன்றன் ஜி.சே. வேதநாயகம் [1] சம்பளத்தின் [2] காடு 228 கீர்த்தனை | உன்றன் திருப்பணியை | unran thirupaniyai | michael samraj | composer thought