У нас вы можете посмотреть бесплатно அரசுக் கல்லூரி Guest Lecturers உரிமைக்காக ஒன்றிணைந்தனர் – பணி பாதுகாப்பு கோரி போராட்டம் | 10-02-2026 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யார் வளாகத்தில் நடைபெற்றது. கௌரவ விரிவுரையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தங்களது நியாயமான உரிமைகளுக்காக குரல் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 1. பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்த ₹57,700 ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2. 12 மாதங்களுக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும், 3. பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 4. வருங்கால வைப்புநிதி போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும், மேலும் பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை நலன்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். கல்வித் துறையின் அடித்தளமாக விளங்கும் கௌரவ விரிவுரையாளர்கள்;, குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு இல்லாமை மற்றும் சமூக நலத் திட்டங்கள் மறுக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். “பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் எங்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்” என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்வுபூர்வமாகக் கூறினர். இந்த போராட்டம், கெஸ்ட் லெக்சரர்களின் உரிமை கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.