У нас вы можете посмотреть бесплатно தேவிமஹாத்ம்யம் கேட்க வேண்டும் யாவும் அம்பாள் வரமாக அளிப்பாள் தமிழ் ஸ்லோகம், கதைவடிவில் DeviMahatmyam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#devimahatmyam #tamil #navaratri #navarathri #devi #chandi #vasantanavaratri #நவராத்திரி யில் சொல்ல 1000 மடங்கு பலன் - தினம் ஒருமுறை கேளுங்கள். தேவி மஹாத்ம்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை - தமிழில் ஸ்லோகம், கதை வடிவில் உங்களுக்கு வேண்டும் யாவையும் அம்பாள் வரமாக அளிப்பாள். பாக்கியம் செய்தோரே இதை கேட்க முடியும். #தேவிமஹாத்மியம் –காப்பு– தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்! செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன் என்னவிங்கு சொல்வதுவோ எப்படித்தான் பாடிடவோ என்னருமைத் தேவியிவள் செய்திருந்த அற்புதத்தை அறியாதான் பாட வந்தேன் அம்மை திருக்கதையை தெரியாதான் பாட வந்தேன் தேவி திருக்கதையை குற்றமிங்கு கொள்ளாமல் குணம் மட்டும் கொண்டிருக்க ஏற்றியும்மை வேண்டுகிறேன் கணபதியின் துணைகொண்டு ஆனைமுகத்தோனை அகிலமெலாம் காப்பவனை பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனை மூஷிகத்தில் வீற்றிருந்து மோனநிலை அருள்வோனை வந்தித்துத் தொடங்கிடுவேன் கலைவாணி அருள்வாயே! வெண்டாமரை வீற்றிருக்கும் வாணி சரஸ்வதியே அண்டிவந்த பக்தருக்கு அருள்ஞானம் தருபவளே சொற்குற்றம் பொருட்குற்றம் ஏதுமிங்கு வாராது தேவிதிருக்கதையைத் திருத்தமாய் அருளிடம்மா! குருவுக்கும் குருவாக என்னுள்ளில் இருப்பவனாம் என்னப்பன் முருகனையும் இக்கணத்தில் துதித்திடுவேன்! ஏறுமயில் ஏறிவந்து என்னுள்ளம் வீற்றிருப்போன் ஆறுமுகசுவாமி நின்றன் அடிபணிந்து தொடங்குகிறேன்! பாடலிலே பழுதின்றிப் பத்திரமாய்க் காத்திடுவாய் நாடிவரும் என் நாவில் நல்ல தமிழ் தந்திடுவாய்! தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்! செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! கதை பிறந்த கதை! தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம் செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! முதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர் இதைக் கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்து பறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும் அவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார் சுரதனென்னும் ஓரரசன் தன்சுற்றம் செய்த துரோகத்தால் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான் வழியிலொரு வாணிகனைக்கண்டு செல்வதெங்கே எனக்கேட்டான் தன்மனைவி மக்களாலே தானுமிங்கே துரத்தப்பட்டத் தன்சோகக் கதையொன்றை சமாதியெனும் அவ்வணிகன் சொன்னதனைக் கேட்டமன்னன் ஆதரவாய் அவன்தோளில் கைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான் ‘இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும் இன்னுமிங்கு என் மனமும் அவர்நலனே நாடிடுதே! ஏனென்று தெரியவில்லை! எப்படியெனப் புரியவில்லை’ அதுகேட்ட வணிகனுமே ‘எனக்குமிங்கு அந்நிலையே! எதுவென்றுஆராய என்னாலும் முடியவில்லை’ என்றான் தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்! செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! மது-கைடப வதம்! தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம் செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! ஆதியிலே பரந்தாமன் ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்தான் ஆதிசேஷன் படுக்கையிலே அமைதியாகத் துயிலிருந்தான் பாற்கடலில் பள்ளிகொண்டப் பரந்தாமன் துயிலிருந்தான் அன்னைபரா சக்தியவள் அருட்செயலால் துயிலிருந்தான் அகிலமெல்லாம் ஆளுபவள் ஆணையினால் துயிலிருந்தான் அண்டமெலாம் காப்பவளின் அரவணைப்பில் துயிலிருந்தான் யோகத்துயில் ஆழ்ந்தவனின் லீலைகளும் துயின்றனவே துயிலிருந்தவன் செவியினின்று பிறந்திட்டார் இருவரக்கர் மதுஎன்னும் ஓர்அரக்கன் கைடபன்என்னும் மறுஅரக்கன் திருமாலின் தன்னினின்று தோன்றியதால் கொண்டிட்டார் தான் என்னும் அகங்காரம் தமதென்ற மமகாரம் அகங்காரம் தலைக்கேற ஏறிட்டார் தம் பார்வை நாபியின் கமலத்தில் தானாக முளைத்திட்ட பிரமனின் உருமீது பட்டதவர் பார்வையங்கு படைப்பினைப் பிறப்பிக்கப் பிரமனவன் முனைகின்ற நேரத்தில் மதுகைடபர் தொந்தரவு செய்திட்டார் தன்தொழிலைச் செய்யவிடாது தடுக்கின்ற அரக்கர்களைத் தன்னால் இயன்றவரை தடுத்துக் களைத்திட்டார் இனிமேலும் படைப்பிதனைச் செய்திடலும் ஆகாது எனவுணர்ந்த பிரமனவன் திகைத்திட்டார், விழித்திட்டார் நடப்பதெல்லாம் நாயகியின் லீலையெனப் புரிந்திட்ட பிரமனவன் தேவியவள் திக்கைநோக்கித் துதித்திட்டார் என்பணியை யான் செய்ய எனக்கிங்கே உதவிடுக எனச்சொல்லிப் பலவாறு துதிகளினால் வேண்டிட்டார் விஷ்ணுமாயா மனமகிழ்ந்தாள் அப்படியே எனவென்றாள் திருமாலின் துயில்விட்டுத் தான்நீங்கிச் சென்றிட்டாள் துயில்கலைந்த திருமாலும் தேவிதனை வணங்கிவிட்டு தானெழும்பிச் சென்றிட்டார் அரக்கர்வதம் செய்திட்டார் மதுகைடப அரக்கருடன் ஆயிரமாண்டு போர்புரிந்து அரக்கர்தமை அழித்திட்டார் படைப்பினையே தொடரவைத்தார் ‘தமஸ்’என்னும் மிதகுணத்தை அரக்கரிவர் கொண்டதனால் தானுமந்த குணம்கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்! முதலாம் கதையிதுவே! முழுதுமாகச் சொல்லிவந்தேன் உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்! தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம் செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! முதலாம் கதை முற்றிற்று! மஹிஷாஸுர வதம் தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம் செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! மஹிஷன் என்னும் ஓர்அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான் தனக்கெனவே பல உருவம் கொண்டுவந்து பாழ்செய்தான் அனைத்திலும் முதன்மையானது அவன் கொண்ட எருமை வடிவம் அனைவரும் நடுங்கிடும் கொடியதோர் பேருருவம் மனிதரையும் தேவரையும் தனதடிமையாய்க் கொண்டான் தனை எதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கி விட்டான் இந்திரனும் பயந்தொளிந்தான் தேவருமே மயங்கி நின்றார் அண்டபகிரண்டமெலாம் நடுங்கிடவே அவன் நடந்தான் இது வரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் வாழ்ந்தான் முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார் அடைக்கலமே நீயென்று அவரடியில் தாள் பணிந்தார் அசுர உடல், எருமைத்தலை, குத்தி விடும் கொம்பிரண்டு எவராலும் வெல்லவொண்ணா வரம் பெற்ற இறுமாப்பு அதிகாரம் தலைக்கேற புரிந்திட்டான் அட்டகாசம் மஹிஷன்பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்