У нас вы можете посмотреть бесплатно புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில்ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி ஓவியமன்ற தலைவர் கலைமாமணி ஓவியர் இபேர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில் ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி ஓவியமன்ற தலைவர் கலைமாமணி ஓவியர் இபேர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. புதுவை மாநில ஓவியர் மன்றமும், புதுச்சேரி ஓவியப்பள்ளியும் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு ஓடும் ரயிலில் ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்து நேற்று (8.3.26) நடத்தியது. இந்த போட்டியில் மாணவ, மாணவிகளும், அவர்களது அன்னையர்களும் சேர்த்து 70 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டி புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வரை ரயிலில் நடைபெற்றது. அப்போது வண்ணம் தீட்ட கோட்டுருவம் தரப்பட்டது. விழுப்புரம் செல்லும் வரை சிறப்பான முறையில் வண்ணம் தீட்டினர். பின்னர் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரும் ரயிலில் அனைவரும் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா புதுச்சேரி ஓவியப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில அரசு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் அன்னையர்களுக்கு 8, மாணவர்களுக்கு 8 என மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஓவியங்களை கலைமாமணி சரவணகுமார், ஓவியர் ஆனந்தராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்திருந்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கூல்டிரிங்ஸ், தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை செல்வம் எமில் தலைமையில் ஓவியர் ஆசிரியர்கள் ராமலிங்கம், கார்முகிலன், வரதராஜன், ஷர்மிளா, ஜோஸ்பின் ஆகியோர் செய்திருந்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அன்னையர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை தங்களுக்கும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இப்போட்டிக்கு ஆதரவு அளித்த புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் முரளி மற்றும் திருச்சி மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் புதுவை மாநில ஓவியர் மன்றம், ஓவியப் பள்ளி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.