 
                                У нас вы можете посмотреть бесплатно கொல்லங்கோடு அருகே ஒன்றாம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
                        Если кнопки скачивания не
                            загрузились
                            НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
                        
                        Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
                        страницы. 
                        Спасибо за использование сервиса ClipSaver.ru
                    
#kanyakumari #news #newstoday #trending #tamilnews #benieltv #breakingnews #viralnews #kollemcode #schoolgirl கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாததால் ஆனிமோள் என்ற பெண் குழந்தையை இவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது இந்த சிறுமிக்கு 7 வயதாகிறது. மேலும் சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தாயாருடன் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுகந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுமியை நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பால்ராஜ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.