У нас вы можете посмотреть бесплатно மகான்கள் இயங்கும் அறியப்படாத சூட்சும உலகம் - ரகசிய உண்மைகள்|ஆச்சர்யம் தரும் நிகழ்வுகள்|TAMIL|VIYASAR или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சூட்சும உலகம் என்பது பூமியில் அதாவது ஸ்தூல உலகில் - ஒளியால் ஆன உலகம். அது வான வெளியில் எங்கே ஒரு இடத்தில் உள்ளதாக எண்ண வேண்டாம். நாம் இருக்கும் இந்த பூமியான ஸ்தூல உலகோடு சேர்ந்த சக்தி வடிவமாக அது இருக்கிறது. அதாவது நான்காவது பரிமாணம் நம்மால் உணர முடிந்தது மூன்று பரிமாணங்கள் அதாவது - நீளம், அகலம் மற்றும் உயரம் நான்காவது பரிமாணம் என்பது ஒளி வடிவம். நமது உடலின் சக்தி வடிவமான ஆரா என்பதும் சூட்சும அல்லது ஒளி வடிவத்தை குறிப்பதுதான். இங்கு இறந்துவிட்ட ஒரு மனிதரின் ஸ்தூல உடல் அழிந்து விடுகிறது. ஆனால் அவரது சூட்சும உடல் சூட்சும உலகத்தை சென்றடைகிறது. நாம் இருக்கும் பூமி மற்றும் சூரிய சந்திரன் மற்றும் பிரபஞ்சத்தை போன்று சூட்சும உலகிலும் எண்ணிலடங்கா கிரங்கங்கள் உள்ளது. ஆனால் அனைத்தும் ஒளி வடிவம். இங்கு இறந்த மனிதரின் குணம், தன்மையை பொறுத்து சூட்சும உலகத்தின் மேலான - ஒளி பொருந்தி அல்லது கீழான - இருள் நிறைந்த பகுதியை சென்றடைகிறார். இங்கு மனிதரின் ஆயுட்காலம் போன்று அங்கு இருப்பவர்களின் ஆயுட்காலம் 500 முதல் 1000 வருடங்கள் வரை இருக்கும். தனது விருப்பப்படி, சில காலம் சூட்சும உலகத்தில் இருப்பவர்கள் தனது பழைய பிறப்பின் கர்ம வினைப்படி குறிப்பிட்ட ஒரு காலத்தில் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள். ஆனால் பூமியில் பிறக்க விருப்பமில்லாமல் மேல்நிலை அடைய விரும்புவர்கள் ஆன்மீக உயர்வு பெற்று அடுத்த நிலையான ஹிரண்ய லோகத்தை அடையும் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். இங்கு ஆயுட்காலம் ஆயிரம் வருடங்களுக்கு மேல். அதற்கும் அடுத்த படி மேலானது காரண உலகம். பூமியில் இறந்த பெரும்பாலான மனிதர்கள் அடைவது சூட்சும உலகமான ஒளி உலகம்தான். பூமியில் வாழ்ந்தபோது கொண்ட இளமை கால தோற்றத்தையே அங்கும் கொண்டிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு உணவு, நீர் போன்ற தேவைகள் இல்லை. அங்கு ஒளிதான் எல்லாம். சூட்சும உலக வாசிகளால், தனது விருப்பப்படி மாளிகைகளையோ, கட்டிடங்களோ கணத்தில் உருவாக்கவோ, அழிக்கவோ முடியும். அவர்களது விருப்பத்தை பொறுத்து தனது உருவத்தையும் அவர்களால் மாற்றிக்கொள்ள முடியும். அவர்களால் சூட்சும உலகத்தின் திரையை தாண்டி வந்து நம்மை கண்காணிக்கவும் முடியும். அவர்களுக்காக நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அவர்களால் உணர முடியும். நாம் தீவிரமான அன்பை அவர்களுக்காக வெளிப்படுத்தும் போது அந்த அதிர்வலையானது அவர்களுக்கு அமைதியை அளிக்கிறது. நமது வேண்டுதல்கள் சூட்சும வாசிகள் மேல்நிலை அடையவும் உதவுகிறது. சில இறைநிலை அடைந்த மகான்கள் சூட்சும உலகில் வந்து தங்கி அங்குள்ள சூட்சும உலகவாசிகள் நற்கதி அடைய உதவியும் செய்கிறார்கள். ( சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி சூட்சும உலகில் தங்கி அவர்களுக்கு உதவும் மகான்களில் ஒருவர்) இறந்தவர்களுக்காக நாம் வெளிப்படுத்தும் துயரமானது சூட்சும உலகத்தில் அவர்களை பின்னோக்கி இழுப்பதை போன்றது. எனவே குறைந்த பட்சம், நமது குடும்ப உறுப்பினர்கள் இறந்த தினம் அல்லது அமாவாசை தினங்களில் அவர்களின் நினைவில் நாம் வெளிப்படுத்தும் அன்பானது உறுதியாக அவர்களை சென்றடைகிறது. ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் இந்த சொற்பொழிவில் இருந்து சில உண்மைகள் நிச்சயமாக நமக்கு பல விழிப்புணர்வுகளை தருகிறது. நமது பிரார்த்தனைகள் நிச்சயமாக அவர்களுக்கு நற்கதி அடைய உதவுகிறது. படையல் என்ற உணவாக படைக்கும் நமது வழிபாடு என்பது ஒரு ஆன்மீக விஞ்ஞானம். அது தவறாமல் அவர்களிடம் செயலாற்றுகிறது. நாம் படைக்கும் உணவு அவர்களுக்கு முக்கியமில்லை என்றாலும் அதன் மூலமாக நாம் வெளிப்படுத்தும் அன்பானது அவர்களை 100 சதவீதம் சென்றடைகிறது. நமது முன்னோர்களுக்கான நமது கடமை அவர்களின் இறந்த தினத்திலாவது அவர்களுக்காக வேண்டுவது. நேரடியாக, நீங்கள் அறிந்த இறையருள் பெற்ற மகான்களிடம், நமது முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுவது உடனடி பலனைத்தரும். பதிலுக்கு அவர்கள் நம்மை வாழ்த்துவதும், தவறாமல் நம்மை வந்தடைகிறது. ஒருவேளை இறந்த நமது முன்னோர்கள் மறுபிறப்பு எடுத்திருந்தால் என்ன செய்வது? எப்படி இருந்தாலும் நமது அன்பானது அந்த குறிப்பிட்ட மனிதரை சென்றடையும். அவரது தூக்கத்தில் ஆழ்மனம் விழித்திருக்கும் போது நமது அன்பை அவர் பெற்றுக்கொள்கிறார். நமது கலாச்சாரத்தில் நாம் பின்பற்றி வந்த இது போன்ற மிகத்தேவையான உன்னதமான செயல்கள், மூடநம்பிக்கை என்றும் முற்போக்கு சிந்தனை என்ற பெயரால் சிதைக்க பட்டு வருகிறது. இறந்த நமது அன்புக்குரியவர்களுக்காக நமது பூரணமான அன்பை வெளிப்படுத்துவோம். மகான்கள் மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் சூட்சும, ஹிரண்ய, காரண உலகத்தில் இருக்கும் ஆன்மாக்கள் நற்கதி அடையவும் உதவுகிறார்கள். அவர்களது கருணை நிறைந்த பாதங்களை பற்றி நன்றி செலுத்துகிறேன். 0:00 Maha periyava 0:53 America's alien concept 2:11 Scientific proof 3:05 SRI ANNAI's Miracle 6:59 SHESADRI Swamigal Miracles 8:50 SRI RAMANA Maharishi Miracles 9:34 3D world ( நம்ம உலகம் ) and 4D world ( சூட்சும உலகம் ) 11:30 Yogi Ram suratkumar Miracles 12:50 Swami vivekanandar Miracles 13:24 Vallalar Miracles 14:52 Mahavathar BABAJI 15:43 ஸ்ரீ அரவிந்தர் சொன்ன எதிர்கால தீர்க்க தரிசனங்கள் 18:32 மகான்களும் நமது பாரதமும் #miracles #india #ramanamaharishi