У нас вы можете посмотреть бесплатно 2008 உச்சநீதிமன்ற வழக்குப்படி ஈர நிலங்கள் பாதுகாப்பு, தற்போதைய நிலை குறித்து கணக்கெடுப்பு பயிற்சி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
2008 உச்சநீதிமன்ற வழக்கு அடிப்படையில் ஈர நிலங்கள் பாதுகாப்பு, தற்போதைய நிலை, எல்லை வரையறை குறித்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கணக்கெடுப்பு பயிற்சி திருவண்ணாமலையில் ஈர நிலங்கள் கள ஆய்வு சரிபார்ப்பு பயிற்சியினை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட ஈர நிலங்களின் கள நிலவரம் சரிபார்ப்பு குறித்து அரசு அலுவலர்கள் கணக்கெடுக்கும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் சுதாகர் தலைமையில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு வேங்கிக்கால் ஏரியில் களப்பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் வனத்துறை சார்பாக ஈரநிலங்களுக்கான நிலத்தர கள ஆய்வு மற்றும் டிஜிட்டல் எல்லை வரையறை வரைபடங்களின் சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல் தொடர்பான ஒரு நாள் நேரடி செயல்முறை பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இப்பயிற்சியில் வனத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மட்டுமின்றி, பல்வேறு தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். களப்பயிற்சி முறையுடன் கூடிய தொழில்நுட்ப நெறிமுறைகள், டிஜிட்டல் வரைபடங்களின் துல்லியத்தன்மை சரிபார்ப்பு நடைமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு மாவட்ட வனத்துறை அலுவலர் சுதாகர், தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தினார். சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் சார்பில் முனைவர் ஏ. மணிகண்டன் மற்றும் மா. பிரேம்குமார் ஆகியோர் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டு, களத்தில் நேரடி விளக்கங்களுடன் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறை நெறிமுறைகளை அரசு அலுவலர்களுக்கு வழங்கினர். 2008 உச்சநீதிமன்ற வழக்கு அடிப்படையில் ஈர நிலங்கள் பாதுகாப்பு, தற்போதைய நிலை, எல்லை வரையறை குறித்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தனது சேட்டிலைட் புகைப்படங்கள் மூலம் ஈர நிலங்கள் குறித்து எல்லை வரையறை பணிகளை மேற்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த பயிற்சி, ஈரநிலங்களின் எல்லை வரையறை வரைபடங்களை துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கும், மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியது.