У нас вы можете посмотреть бесплатно ENNarkariya embAr Upanyasam @ SriRangam on 08th Feb 2026 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) .. விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ' சித்திரையில் செய்ய திருவாதிரையில்' ' சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக' வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. 'ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்' என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு. இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக 'க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத' என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர். இந்த ஐதிஹ்யத்தை நினைத்தே மேற்கூறிய யதிராஜ ஸப்ததி ச்லோகத்தில் உடையவரை 'ஸந்மந்த்ர வித்' என்றருளினார் போலும்! இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் ! இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக ! 'அக்காரக்கனி' 😊