У нас вы можете посмотреть бесплатно #rti или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@சமூகப்போராளி த.அ.உ.ச. 2005 பிரிவு 2(ஜெ) கள ஆய்வு மனுவிற்கான மேல்முறையீட்டுக் காரணங்கள்: பார்வை 1 இல் கண்ட மனுவை பார்வை 2 இல் கண்டுள்ள படி பெற்றுக்கொண்ட பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பிரிவு 7(1) ஐ மதிக்காமல், நாளது தேதி வரை எந்தவித பதிலும் தரவில்லை, எனவே கனம் மேல்முறையீட்டு அலுவலர் இந்த மேல்முறையீட்டு மனுவை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 சட்டப்பிரிவு 19 (1) கீழ் மேல்முறையீட்டு மனுவாக ஏற்று பார்வை ஒன்றில் கண்ட மனுவிற்கு கள ஆய்வு செய்து இலவசமாக தகவல்களை பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கிறேன். பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் உரிய காலத்தில் தகவல் வழங்காமல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 7(1) மதிக்காமல் பார்வை 5 இல் கண்டவாறு கள ஆய்வுக்கு பதில் வழங்கியிருப்பதை பார்க்கும்போது பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரியாதது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் குறைந்தது 7 தினங்களுக்கு முன்பாவது கள ஆய்வு செய்ய அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என்ற சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல் ஆய்வுக்கு அனுமதி கடிதம் வழங்கியிருப்பது மனுதாரர் ஆய்வுக்கு வரகூடாது என்ற உள்நோக்கத்தோடும் ஊழலை மறைக்கும் பொருட்டு கடிதம் அனுப்பியிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேற்படி பள்ளியானது அரசு அங்கீகாரம் பெற்றது என்பதால், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம், மதிய உணவு, மேலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம் போன்றவை மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசால் கொடுக்கப்பட்டவை ஆகும். இவ்வாறு நிதி உதவிபெறும் பள்ளி அரசிடமிருந்து எந்த வருமானமும் பெறவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இது மாதிரியான பொய்களைக் கூறி மனுதாரரை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம், என்பதையும் நேர்மையான முறையில் பள்ளி இயங்குகிறதா என்பதை மனுதாரர் அறிய முயலும் போது அதனை எந்தவிதத்திலும் மறைக்கவும் மறுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு நினைவு படுத்துகிறேன். மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படவேண்டும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு 11 - ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும். பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை அனுப்ப வேண்டும். அந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மூன்றாம் நபர் பொதுத்தகவல் அலுவலரிடம், “ஏன் அந்த தகவலை வழங்கக்கூடாது?” என்பதற்கான ஆட்சேபணையை விளக்க வேண்டும். அந்த மூன்றாம் நபர் விளக்கியுள்ள ஆட்சேபணையைப் பொதுத்தகவல் அலுவலர் கருத்தில் கொண்டு, அந்த ஆட்சேபணைகள் ஏற்கக்கூடியவையா?, இல்லையா? என்று பரிசீலணை செய்து, ஏற்கக்கூடியது என்றால், அந்தத் தகவலை வழங்க மறுத்துவிடலாம். ஏற்கக்கூடியது அல்ல என்றால், அந்தத் தகவலை பொதுத்தகவல் அலுவலர் தானாக முன்வந்து வழங்கலாம். பொதுத்தகவல் அலுவலர் தான் எடுத்த முடிவினை சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும். பொதுத்தகவல் அலுவலர் எடுத்த முடிவினை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19 - ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் கொடுத்துள்ள பதில் மிகவும் வியப்பாக இருக்கிறது. பொதுமக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு உதவிபெறும் பள்ளியின் அலுவலர்கள் பற்றிய தகவலானது மூன்றாம் தரப்பினர் தகவல் எனவே தகவல் வழங்க வேண்டியதில்லை என்று மறுத்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது. பார்வை 2 - ல் கண்டவாறு மனுவை பெற்றுக்கொண்ட பொது தகவல் அலுவலர் பார்வை 3 & 4 ல் கண்டவாறு 30 தினங்கள் கடந்து பதில் கடிதம் அனுப்பி இருப்பதை பார்க்கும்போது பொது தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் துளி அளவும் தெரியவில்லை என்பது அவர் கடிதத்தின் மூலம் தெரிகிறது. கள ஆய்வு மனுவிற்கு 30 தினங்கள் கழித்து தான் கடிதம் அனுப்ப வேண்டும் என்று எந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பொது தகவல் அலுவலர் குறிப்பிடவில்லை. மேலும் கள ஆய்வு என்பது மனு அளித்த அன்றைய தினமே ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை பொது தகவல் அலுவலருக்கு தங்களின் வாயிலாக நினைவூட்டுகிறேன். மேலும் பார்வை 1-ல் கண்ட எனது ஆய்வு மனுவிற்கு பார்வை 3 & 4 - ல் கண்டவாறு அனுமதி அளித்து கடிதம் அனுப்பிய பொது தகவல் அலுவலர் கடிதத்தில் சில நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய ஊழியர் ஆகிய பொது தகவல் அலுவலர் எந்த சட்டப்பிரிவு மற்றும் எந்த சட்ட விதிகளின் கீழ் நிபந்தனை வகுத்தார் என்று கடிதத்தில் சுட்டிக் காட்டவில்லை.