У нас вы можете посмотреть бесплатно புதுக்கடை அருகே ஏணியில் மின்சாரம் பாய்ந்து பலியான 4பேரின் குடும்பத்தினருக்கு தலா 5லட்சம் நிவாரண உதவி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#puthukadai #kanyakumari #enayamputhenthurai #electricity #4dead #church #festival #benieltv கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள இனையம்புத்தன்துறை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று இரவு தேர்ப் பவனி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் பங்கு மக்கள் ஈடுபட்டனர் அப்போது அந்த ஆலயத்தில் சக்கரம் பொருத்தப்பட்ட 30அடி உயரம் கொண்ட ஒரு ராட்சத ஏணி இருந்தது. இந்த ஏணி உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி கொண்ட ஏணி ஆகும். இந்நிலையில் இனையம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த விஜயன், வயது52, ஜஸ்டஸ், வயது33, அருள் சோபன், வயது45, மைக்கேல் பின்றோ, வயது40 ஆகிய 4பேரும், ஏணியை நகர்த்தி தேர் செல்லும் பாதையை சீர் செய்வதற்காக ஆலயத்தின் முன்பகுதியில் இருக்கும் சாலைக்கு கொண்டு வந்தனர். அந்த சாலையின் ஓரத்தில் உயரழுத்த மின்கம்பி காணப்பட்டது. அப்போது அவர்கள் 4பேரும் ஏணியை நகர்த்தி கொண்டு வந்தபோது, எதிர்பாராமல் உயர் அழுத்த மின்கம்பி மீது ஏணி உரசியது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஏணி வழியாக 4பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 4பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதை ஆலய வளாகத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மின்சாரம் தாக்கியதில் 4பேரின் உடல் கருகி கொண்டிருந்த நிலையில், சுற்றி நின்றவர்கள் ஆபத்தை உணர்ந்து அருகில் செல்லவில்லை. உடனடியாக இதுபற்றி மின்வாரிய அலுவல கத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். ஏணியின் உயரத்தை குறைக்காமல் ஏணியை அப்படியே நகர்த்தி சென்றது தான் விபத்திற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. பின்னர் 4பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய விழாவில் நேற்று நடைபெற இருந்த தேர்ப்பவனி ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்த 4பேரும் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆலய திருவிழாவில் 4பேர் இறந்ததால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் தகவல் அறிந்த விஜய் வசந்த் எம்பி, நேரில் சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தகவல் அறிந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5லட்சம் நிவாரண உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.