У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலி தென்றலில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்ளின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இலங்கை வானொலி அறிவிப்பாளர் மதுரக் குரலோன் திரு.கே. எஸ் ராஜா ! *************************************** தமிழ் கூறும் நல்லுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை வகிப்பவர்தான் ,அன்றும் இன்றும் என்றும் நேயர்கள் நெஞ்சங்களில் வாழும் திரு அமரர் கே எஸ் ராஜா அவர்கள் . அன்னை வானொலியின் அறிவிப்பாளர்களில் திரு கே. எஸ். ராஜா அவர்கள் தனக்கென ஒரு தனிப் பாணியை அமைத்து, தனது குரலின் இனிமையால் நேயர்களைக் கவர்ந்தவர். .தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எவ்வாறு ஒரு தனக்கென்று ஒரு "ஸ்டைலில்" திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்தாரோ, அதேபோன்று ஒரு தனிப்பட்ட தனது குரலின் "ஸ்டைல் " மூலமாக அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களும் நேயர்களைக் கவர்ந்தார் . அன்னார் உலகைவிட்டு மறைந்தும் இருபத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும், அவர் உயிருடன் வாழ்வதைப் போலவே எண்ணி, அவரது அபிமான நேயர்கள் இன்னும் அவரை மனதிற்குள் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தாம் உலகை விட்டு மறைந்தாலும் மனங்களில் மறவாமல் இருக்கும் பெரும் பாக்கியத்தை இந்த உலகில் ஒரு சிலரால் மட்டுமே பெற முடியும். அந்த வகையில் அறிவிப்பாளர் அமரர் திரு கே.எஸ்.ராஜா அவர்களும் ஒருவரென்றால் அது மிகையல்ல. இன்று அன்னாரின் நினைவு தினம். அதனை முன்னிட்டு நமது அன்னை வானொலி தென்றலில், மதிய விருந்து நிகழ்ச்சியை அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியாகவே நடத்தி முடித்தார்கள். பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ,அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களைப்பற்றிய தங்கள் கருத்துக்களையும்,உள்ளக் கிடக்கைகளையும் வெளியிட்டார்கள்; கூறினார்கள். உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி இன்று மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அந்த வரிசையிலே அன்னை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான, உலக அறிவிப்பாளர் என்ற பெயர்பெற்ற ,எமது அன்பு அபிமான அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச் .அப்துல் ஹமீத் அவர்கள், அறிவிப்பாளர் அமரர் திரு கே. எஸ். ராஜா அவர்களைப் பற்றி ,மிகவும் சிறப்பாகத் தனது மனக் கிடக்கைகளை, இந்நிகழ்ச்சியிலே தெரிவித்தார்கள். .அன்னாருக்கு நேயர்களாகிய எங்கள் மனம் நிறைந்த நன்றிகளும் நல் வாழ்த்துக்களும் அன்போடு சமர்ப்பணம்! அவர்கள் வழங்கிய செவ்வியை இப்போது இங்கே அனைவருக்காகவும் தருவதில் மிக்க மகிழ்ச்சியுறுகின்றேன்.நிகழ்ச்சியை திறம்பட நடத்திய எங்கள் இளைய அறிவிப்பாளர் திரு. ராஜகோபால் உதயகுமார் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகளும் நல்வாழ்த்துக்களும்.அத்தோடு தென்றலுக்கும் இலங்கை வானொலிக்கும் எங்கள் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் அன்போடு சமர்ப்பணம் ! எங்கள் அன்பின் அபிமான அறிவிப்பாளர் அமரர் திரு கே எஸ் ராஜா அவர்களின் நினைவு தினத்தில், அன்னாரின் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்! அன்னாரது பொன்னான ஆத்மா சாந்தி அடைவதாக!! என்றும் அன்பு அபிமான நேயர் """""'''"""""'""""""""""""""""""""""""""""""""""""""""" எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் -இலங்கை (கி.மா) 0777161224 - 0754551230. """""""""""""""""""""""""""""""""""""""""""""""" 03 /08 / 2021 ( வெள்ளி) """"""""""""""""""""""""""""""""""""""""""