У нас вы можете посмотреть бесплатно Melmaruvathur Bangaru Adigalar Birthday Special Song | Akilam Muzhuthum | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Akilam Muzhuthum - Tamil Lyrics Singer : Kalpana Lyrics : Senkathirvanan Music : Kanmaniraja Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : அகிலம் முழுதும் குரலிசை : கல்பனா கவியாக்கம் : செங்கதிர்வாணன் இசை : கண்மணிராஜா தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : அகிலம் முழுதும் ஆள்பவள் நீயே அம்மா எங்கள் ஓம் சக்தி முகிலாய் கருணை பொழிபவள் நீயே தாயே எங்கள் ஓம் சக்தி எதிலும் எங்கும் இருப்பவள் நீயே எங்களைக் காப்பாய் ஓம் சக்தி சரணம் சரணம் அம்மா சரணம் சரணடைந்தோமே உன் பதமே உனதடி பணிந்திட வந்தோம் தாயே உயர்ந்திட வைப்பாய் ஓம் சக்தி கணமொரு தடவை உன்புகழ் சொல்லி கவலைகள் மறப்போம் ஓம் சக்தி மன இருள் நீக்கும் மாசக்தி நீயே மங்களம் தருவாய் ஓம் சக்தி தீராப் பிணியைத் தீர்த்திட வேண்டி திருவடி பணிந்தோம் ஓம் சக்தி மாறாக் கருணை கொண்டவள் நீயே மலரடி தொழுதோம் ஓம் சக்தி நீராய் நிலமாய் நெருப்பாய் காற்றாய் இருப்பவள் நீயே ஓம் சக்தி தாயில்லாமல் பிள்ளைகளுண்டோ தயைபுரிவாயே ஓம் சக்தி வாயில்லாத பிள்ளையைக் காக்க வருவாய் இங்கே ஓம் சக்தி நோயில்லாமல் வாழ்ந்திட வைப்பாய் அம்மா எங்கள் ஓம் சக்தி தேவியின் அருளை நாடிடுவோர்க்கு திரளும் செல்வம் ஓம் சக்தி காரியம் யாவும் கைவர நாளும் கனிந்தருள் செய்வாய் ஓம் சக்தி நாரிடைப் பூவாய் நறுமணம் வீசிட நல்வரம் தருவாய் ஓம் சக்தி யாவரும் ஒன்றாய் வாழ்ந்திடத்தானே பாதம் பணிந்தோம் ஓம் சக்தி மூலகாளும் நாயகி உன்னை பாடிட வந்தோம் ஓம் சக்தி வாழ்வினில் வளமை பெருகிடவேண்டும் வரம் தருவாயே ஓம் சக்தி நெஞ்சினில் பேதம் நீங்கிட வேண்டும் நினதருளாலே ஓம் சக்தி பிறவியின் பயனைப் பெற்றிடவேண்டும் பேரருள் செய்வாய் ஓம் சக்தி வஞ்சனை எண்ணம் விலகிடவேண்டும் வரம் தருவாயே ஓம் சக்தி பிறரின் துயரம் நீக்கிடும் எண்ணம் பெருகிட வேண்டும் ஓம் சக்தி வறுமையும் பிணியும் வாராதிருக்க வழிவகை செய்வாய் ஓம் சக்தி கருமம் ஒன்றே கண்ணெனக் கருதிட அருளிடுவாயே ஓம் சக்தி ஊழ்வினையாவும் நீக்கிட உந்தன் உதவியைக் கேட்டோம் ஓம் சக்தி தாழ்வினை அகற்றி உயர்வினைத் தந்து தங்கிடுவாயே ஓம் சக்தி ஆழ்கடல் அமைதி போலெந்தன் நெஞ்சில் அமர்ந்திருப்பவளே ஓம் சக்தி வந்துனைப் பணியும் பெண்களின் வாழ்வில் வளமை சேர்ப்பாய் ஓம் சக்தி அன்புடன் உன்னை அர்ச்சனை செய்தால் அகம் மகிழ்வாயே ஓம் சக்தி இன்பம் என்றும் எம்முடன் தங்கி இருந்திடச் செய்வாய் ஓம் சக்தி இருமுடி சுமந்து உன்னிடம் வந்தால் இருவினைத் தீர்ப்பாய் ஓம் சக்தி இனிவரும் பிறவி எல்லாம் உந்தன் இணையடிப் பணிவோம் ஓம் சக்தி பிரம்படி தாங்கிய சிவனார் துணையே பெரியவள் நீயே ஓம் சக்தி சக்தியை வணங்கும் பக்தர்கள் யாவரும் சக்தியின் வடிவே ஓம் சக்தி சக்தியின் பெருமை சொல்பவர்க்கெல்லாம் முக்தியைத் தருவாய் ஓம் சக்தி சத்தியம் தன்னை காத்திட நீயே சடுதியில் வருவாய் ஓம் சக்தி ஆடையில் சிவப்பு அணிந்தால் சிறப்பு அளிப்பவள் நீயே ஓம் சக்தி பீடம் நாடி வந்தவர்க்கெல்லாம் பிழைபொறுப்பாயே ஓம் சக்தி வாடும் நிலைமை வாடிட வேண்டும் வரம் தருவாயே ஓம் சக்தி மங்களம் என்றும் சேர்ப்பவள் நீயே மருவத்தூரின் நாயகியே திங்களைப் போலே குளிர்ந்த நல்நெஞ்சம் கொண்டவள் நீயே ஓம் சக்தி பொங்கலும் வைப்போம் பூஜைகள் செய்வோம் ஏற்றிட வேண்டும் ஓம் சக்தி எங்களின் துன்பம் இல்லாதிருக்க என்றும் அருளிடு ஓம் சக்தி குங்குமம் தந்து மங்களம் தந்து கொடுப்பாய் செல்வம் ஓம் சக்தி பொங்கிடும் கருணை கொண்டவள் உந்தன் பொன்னடி பணிவோம் ஓம் சக்தி நாதமும் கீதமும் தந்தவள் நீயே நானுனைப் பணிந்தேன் ஓம் சக்தி வேதம் நான்கும் அறிந்தவள் நீயே வேற்றுமை நீக்கும் ஓம் சக்தி ஆதவன் கதிராய் அறிவின் ஒளியாய் ஆனாய் நீயே ஓம் சக்தி கண்களை மூடி உந்தனை எண்ணி காலம் கழிப்போம் ஓம் சக்தி மண்ணுலகெல்லாம் மகிழ்ந்திட வேண்டும் மனம் வைப்பாயே ஓம் சக்தி எண்ணம் யாவும் அழித்திடச் செய்வாய் எங்களின் தேவி ஓம் சக்தி ஆடியில் பூசம் அற்புத நாளில் அனைவரும் வருவோம் ஓம் சக்தி சூடம் ஏற்றி உன்னடிப் பணிந்து அருள் பெறுவோமே ஓம் சக்தி நாடகம் நத்தம் நாயகி நீயே நலம்புரிவாயே ஓம் சக்தி தையினில் பூசம் வந்திடும் போதினில் தாள்பணிந்திடுவோம் ஓம் சக்தி வையகம் உன்னை வணங்குதல் கண்டு வழித்துணை புரிவாய் ஓம் சக்தி மெய் வடிவான அன்னையும் நீயே மேன்மைகள் தருவாய் ஓம் சக்தி ஞாயிறு செவ்வாய் கிருத்திகை நாளில் அருள் வாக்களிப்பாய் ஓம் சக்தி நேயம் செழித்திட நின்பதம் பணிந்தோம் நித்தம் கைகொடு ஓம் சக்தி மாயை திரையை விலக்கிடுத் தாயே மண்டலம் ஆளும் ஓம் சக்தி பெளர்ணமி நாளில் பணிந்தவர்க்கெல்லாம் பலன் தரும் தேவி ஓம் சக்தி நல்வழி காட்டும் அன்னையும் நீயே நாளும் பணிவோம் ஓம் சக்தி முள்ளாய் இருக்கும் உள்ளம் மலராய் மாறிடச் செய்வாய் ஓம் சக்தி மேல்மருவத்தூர் வந்திடும் பேர்க்கு மேன்மைகள் தருவாய் ஓம் சக்தி பால் மனம் கொண்ட பார்கவி நீயே பழிகளை நீக்கிடு ஓம் சக்தி வேலவன் கையில் வேலினை தந்து வெற்றியும் கொடுத்தாய் ஓம் சக்தி காலனின் பயத்தைப் போக்கிடுவோமே காரணம் நீயே ஓம் சக்தி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் நலமளிப்பவளே ஓம் சக்தி வாளென இன்னல் வாராதிருக்க வந்தெமைக் காப்பாய் ஓம் சக்தி வேப்பமரத்தின் அடியினில் சுயம்பாய் தோன்றிய எங்கள் ஓம் சக்தி காக்கும் கடவுள் கலியுகம் தன்னில் நீயே அம்மா ஓம் சக்தி பூக்கும் மலரும் புலரும் பொழுதும் போற்றிடும் உன்னை ஓம் சக்தி புற்றாய் இருந்து மழையினில் கரைந்து வெளிப்பட்டாயே ஓம் சக்தி முத்தாய் மணியாய் ஒளி தருவாயே தாயே எங்கள் ஓம் சக்தி வித்தாய் விழுதாய் விளங்கிடும் உன்னை வேண்டுதல் செய்தோம் ஓம் சக்தி ஆணுடன் பெண்ணும் அனைவரும் வந்து அருள் பெறுவாரே ஓம் சக்தி காண்பது எல்லாம் உன் திருவடிவாய் காட்சி தருவாய் ஓம் சக்தி மாண்புடன் மண்ணில் வாழ்ந்திட வேண்டி மலரடி பணிவோம் ஓம் சக்தி ஊனுடன் உறக்கம் மறந்திட வைக்கும் உன் திருமுகமே ஓம் சக்தி தேனினும் மேலாய் திகட்டாதினிக்கும் தேவியின் நாமம் ஓம் சக்தி வாழ்வினில் என்றும் நானுனை வணங்கும் பேறினை தருவாய் ஓம் சக்தி சரணம் சரணம் அம்மா சரணம் சரணடைந்தோமே உன் பதமே