У нас вы можете посмотреть бесплатно கூவாகம் கூத்தாண்டவர்: திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம். или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் ஏராளமான, பொதுமக்கள் பங்கேற்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கூத்தாண்டவரைத் தங்கள் குலதெய்வமாகக் கருதி திருநங்கைகள் வழிபடும் இக்கோயிலில் சித்தி ரைப்பெருவிழா கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பந்தலடி தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் பாரதம் நிகழ்வு ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து சந்தனுசரிதம், பீஷ்மர் பிறப்பு, தர்மர், பாஞ்சாலி பிறப்பு, பகாசூரன்வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜாசூய யாகம், தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் வெள்ளிக்கால் நடுதல், கிருஷ்ணன் தூது ஆகிய நிகழ்வுகள் நிகழ்வுகளும், இரவில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி -கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயமும், மே 12-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தலும் நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை (மே 13) மாலை கூவாகம் கூத்தாண்டவர் சன்னதி முன்பு கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலிகட்டிக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான சூடங்களை ஏற்றி திருநங்கைகளும், பொதுமக்களும் வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து புதன்கிழமை காலை கோயிலிலிருந்த அரவான் சிரசுவுக்கு முதல் மாலை அணி விக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று, கும்மியடித்தனர். தொடர்ந்து சூரைத் தேங்காய்களை திருநங்கைகள் உடைத்து, வழிபாடு செய்தனர். இதன் பின்னர், கோயிலின் வல துபுறத்தில் சகடையில் 30 அடி உயரக் கம்பம் நடப்பட்டு, அதில் வைக்கோல்புரி சுற்றப்பட்டது. இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படைப் பணியாகக் கரு தப்படும் வழக்கமாகும். இதைத் தொடர்ந்து கீரிமேட்டிலிருந்து பக்தர்கள் பூஜை செய்து எடுத்து வந்த அரவானின் புஜங்கள், மார்புப் பதக்கம், நத்தம் கிராமத்திலிருந்து பாதம், கைகள், தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி, சிவிலியாங்குளம் கிராமத்திலிருந்து கை, விண்குடை ஆகியவை கொண்டுவரப்பட்டு, வைக்கோல் புரி மீது பொருத்தி, அரவானின் திருவுருவம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவாமி அரவானுக்கும், கோயிலுக்கு அருகிலுள்ள ஆஞ்சனேய சுவாமி க்கும் மிகப்பெரிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் காலை 8.35மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ. மணிக்கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கூவாகம், கூ..தொட்டி, கீரிமேடு, நத்தம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.