У нас вы можете посмотреть бесплатно SRI LALITHA SAHASRANAMAM / லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? (Tamil Audio & script) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#srilalithasahasranamastotram #srilalithasahasranamam #lalithasahasranamamtamil #bhakthilayam #srilalithasahasranamabhashyam #sahasranamaparayanam Sri Lalitha sahasranamam Tamil Audio with script (STUDIO RECORDING) சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம். ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது. சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது. லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் – ஸ்ரீமாதாவின் அவதாரம் கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்) பண்டாசுர வதம் மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்) குண்டலினீ ரூபம் பக்த அனுக்ரஹம் நிர்க்குண உபாசனை சகுண உபாசனை பஞ்சப்ரஹ்ம ரூபம் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம் பீடங்களும், அங்க தேவதைகளும் யோகினீ தியானம் விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும் சிவசக்தி ஐக்கியம் பிரபஞ்சத்தின் மையத்தில், அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும் ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில், ஶ்ரீலலிதா திரிபுரஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளதுமந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்தமாதர், மற்ற மகாவித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர். சந்தோஷம் பொங்கிப்பெருகிய வேளையில், சகல ஆன்மாக்களையும் ரக்ஷிக்க, தேவி கருணைகொண்டாள். அதனால் ஜகன்மாதாவான லலிதாம்பிகை, உலகஉயிர்கள் இன்புற்றுவாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக்தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கவுலினி, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாமதுதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்தகோடி திருநாமங்களில், 'ஶ்ரீலலிதா' என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால், அந்த பெயரிலேயே அவள் திருநாமங்களின் தொகுப்பும் உருவானது.