Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 5) ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன? இதுதான் ஈமான்:- நம்பிக்கைகள்! в хорошем качестве

5) ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன? இதுதான் ஈமான்:- நம்பிக்கைகள்! 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



5) ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன? இதுதான் ஈமான்:- நம்பிக்கைகள்!

5) ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன? இதுதான் ஈமான்:- நம்பிக்கைகள்! அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு எவ்வளவு தான் இருந்தாலும் ஈமான் கூடி குறைகிறது. அதிகமாக ஷைத்தானிய எண்ணங்களில் மூழ்கடிக்கப்படுகிறோம், ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன உலகில் உள்ள பெரும்பாலான மூஃமீனுக்கும் பொதுவாக காணப்படும் விஷயங்களில் ஈமான் கூடி குறையும் பிரச்சனை உள்ளது. *பொதுவாக நமக்கு சோதனைகள் ஏற்படும் சமயங்களில்,ஏதேனும் திடுக்கிடும் விபத்துகளை பற்றி கேள்விப் படும்போது, ரமலான் மாதங்களில் ஈமான் சற்று கூடுவதையும், சாதாரண சமயங்களில் ஈமானிய சிந்தனை குறைவதையும் அறியலாம்.* இது இயற்கையான ஒன்றுதான் எனினும் மரணத்தை எதிர்நோக்கியும், கியாமத்து நாளை எண்ணிப் பார்த்தும் இருந்தால் ஈமானிய சிந்தனைகள் அதிகரிக்கும். *மூஃமீன்களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலை ஆகும், சிறைச்சாலயில் சில பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும், சுதந்திரமா செயல்பட இயலாது, என்பதை நினைவில் வைத்தாலே உலக ஆசைகளை கட்டுப்படுத்த இயலும். மேலும் உலகத்தில் நாம் சாதாரண வழிப்போக்கர்கள், இதில் எப்போது வேண்டுமானால் செல்ல தயாராக இருக்க வேண்டி வரும் என்பதை நினைவில் அவ்வப்போது கொண்டு வந்தாலே ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபடலாம். ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள்தாம், ஆனால் அந்த தவறிலிருந்து விடுபட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி மீண்டுவிட வேண்டும். ஒவ்வொரு முறை ஈமானில் உறுதி குறையும்போதும் படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான். *மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது. *அல்லாஹ்வின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இவ்வுலக சோதனை என்பது நிச்சயம். அதனை மறுமை பயன்களுக்காக சகித்துக் கொள்ளும் சகிப்புத்தன்மையே பக்குவப்பட்ட ஈமானுக்கு உகந்ததாகும். மறுமை வெற்றிக்கும் உரியதாகும். சோதனைகளின் போது இறைவனை நினைவு கூறுவதை போலவே சந்தோஷத்தின் போதும் நினைவு கூறினால், வழி மாறுவதிலிருந்து பாதுகாக்கப்படும். இதற்கு தான் இஸ்லாம் வகுத்திருக்கும் அருமையான வழி தொழுகை, ஒவ்வொரு தொழுகையின் போதும் அல்லாஹ்வை ஆழமாக நினைவு கூறுவதால் ஈமான் உறுதிப்படும். நோன்பு அவ்வப்பொழுது வைப்பதன் மூலமும் பாட்டரி சார்ஜ் ஆவது போல் உள்ளம் தூய்மை படுத்தப்படும். . கோபத்தின் போதும்,அச்சத்தின் போதும் ஷைத்தான் ஊசலாடி உள்ளத்தை கெடுப்பான். இதுபோன்ற சமயத்தில் நெருப்பை நீரை கொண்டு அனைக்கும் விதமாக உளூ செய்து கோபத்தை தணிக்க வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தை பெறுவதற்கு தொழுகை, நோன்பில் மட்டும்தான் என்றில்லை,. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உதாரணமாக கணவன், குழந்தைகளை கவனிப்பது, உறவினர்களை நேசிப்பது, அண்டை வீட்டாருடன் நட்பு, நோயாளியை சென்று பார்ப்பது, தாய் தந்தையை அழகிய முறையில் கவனிப்பது, சுத்தமாக நாம் இருப்பது, சுற்று புறத்தை சுத்தமாக வைப்பது, பொது சேவை இப்படி நாம் வாழும் நம் வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் உள்ளது. எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்: *அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17) *இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“ (தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.) என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 6479 *இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“ உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 7405. *இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.* *ஸஹீஹ் புகாரி 6436. அல்லாஹுவே மிகவும் அறிந்தவன் ஜஸாகல்லாஹ் ஹைரன்

Comments