У нас вы можете посмотреть бесплатно திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருள்மிகு எறும்பீசர் கோயில் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) (70/274) சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70-வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பதிகம் பாடப் பெற்ற திருத்தலமாகும். மேலும் காவிரி தென்கரைத் தலங்களில் 7-வது தலமாகவும் திகழ்கிறது. மூலவர்:எறும்பீஸ்வரர் உற்சவர்:சோமாஸ்கந்தர் இறைவி:நறுங்குழல் நாயகி தல விருட்சம்:வில்வம் தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்:திருவெறும்பியூர், ஊர்:திருவெறும்பூர் மாவட்டம்:திருச்சி கோவிலின் சிறப்பு இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர் உள்ளார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். தலபுராணம் தாரகாசுரன் என்ற அரக்கன், தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் துன்பப்பட்டு வந்த தேவர்கள் அனைவரும் நாரத முனிவரிடம் சென்று, அசுரனின் கொடுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லும்படி வேண்டி நின்றனர். அதற்கு நாரதர், திருச்சி அருகில் உள்ள இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்தால் உங்களின் துன்பங்கள் விலகும் என்று கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும், தாரகாசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பாக உருமாறி, இத்தல இறைவனை வழிபட்டனர். திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார்லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருந்த காரணத்தால், எறும்புருவில் இருந்த தேவர்களால் அதில் ஏறிச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை. தேவர்களின் சிரமத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், தனது லிங்கத் திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார். இதனால் எறும்புருவில் இருந்த தேவர்கள் அனைவரும் எளிதில் மேலேறிச்சென்று பூஜை செய்வதற்கு வசதியாக லிங்கத்திருமேனி சொரசொரப்பாக மாறியது. இதன் காரணமாக இத்தல இறைவன் எறும்பீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எறும்புகளை சுறுசுறுப்புடன் வழிபடச் செய்து அவர்களுக்கு அருள் வழங்கினார் ஈசன் என்பதால், இந்தத் தலம் சுறுசுறுப்புக்குப் பேர் பெற்றது. சுவாமிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேலோங்கும். மேலும் துன்பங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நறுமனம் வீசும் நாயகி இத்தலத்தில் வீற்றிருந்து அம்பாள், ‘நறுங்குழல்நாயகி’ என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். நறுமணம் வீசும் கூந்தலுடன் இவர் திகழ்வதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறார். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்" என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம். அமைவிடம் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் திருவெறும்பூர் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால், மன்னார்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பயணம் செய்து திருவெறும்பூர் அடையலாம். திருச்சியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்து திருவெறும்பூர் அடையலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9842957568 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google Map Link https://maps.app.goo.gl/rTBH3x1FKLJ2r... if you want to support us via Google pay phone pay paytm 9655896987 Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்