У нас вы можете посмотреть бесплатно நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் | Thevaram | தேவாரம் | Nambinarku Arul | Sundarar | சுந்தரர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram: / __keerthana_vengatesan Follow us on Facebook Page: / keerthanavengatesan1 நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள் செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலை உம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளடும் முடனே உறைவிடம் அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 1 விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன் றிட்டுவிட்ட காதினீர் என்று திடங்கொள் சிந்தையி னார்கலி காக்குந் திருமிழலை மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்திழிச்சிய வான நாட்டையும் அடங்கல் வீழி கொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 2 ஊனை உற்றுயிர் ஆயினீர் ஒளிமூன்று மாய்த்தெளி நீரோ டானஞ்சின் தேனை ஆட்டுகந்தீர்செழு மாடத் திருமிழலை மானை மேவிய கையினீர்மழுஏந்தினீர் மங்கை பாகத் தீர்விண்ணில் ஆன வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுதிரே. 3 பந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர் மதிப்பிதிர்க் கண்ணி யீரென்று சிந்தைசெய் திருக்குஞ்செங்கை யாளர் திருமிழலை வந்துநாடகம் வான நாடியர் ஆட மாலயன் ஏத்த நாடொறும் அந்தண் வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுதிரே. 4 புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத் திரிசெய் நான்மறை யோர்சிறந் தேத்துந் திருமிழலைப் பரிசி னாலடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர் அரிய வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 5 எறிந்தசண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர் செறிந்த பூம்பொழில் தேன்துளி வீசுந் திருமிழலை நிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும் நேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம் அறிந்து வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 6 பணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர் திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலை தணிந்த அந்தணர் சந்தி நாடொறும் அந்தி வானிடு பூச்சிறப்பவை அணிந்து வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 7 பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ் சுற்ற மாயினீர் தெரிந்த நான்மறை யோர்க்கிடம் ஆய திருமிழலை இருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற் காசு நித்தல்நல்கினீர் அருந்தண் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே. 8 தூய நீரமு தாய வாறது சொல்லு கென்றுமைக் கேட்கச் சொல்லினீர் தீய ராக் குலை யாளர் செழுமாடத் திருமிழலை மேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண் ணப்பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. 9 வேத வேதியர் வேத நீதியர் ஓது வார்விரி நீர்மிழலையுள் ஆதி வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுகென்று நாத கீதம்வண் டோதுவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ் பாதம் ஓதவல் லார்பர னோடு கூடுவரே. #thevaram #devaram #tamil #tevaram