У нас вы можете посмотреть бесплатно 127 கீர்த்தனை | குணப்படு பாவி | Gunappadu Paavi | michael samraj | composer thought или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
michaelsamraj@gmail.com நண்பர்களே! நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள் மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது. சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன். கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள். தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். Michael Samraj பல்லவி குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி-இப்போ. அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்; காலமிருக்கையில் சீலமதாக நீ. - குணப்படு சரணங்கள் 1. கர்த்தனை நீ மறந்தாய்,-அவர் கற்பனையைத் துறந்தாய், பக்தியின்மை தெரிந்தாய்,-பொல்லாப் பாவ வழி திரிந்தாய், புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா, உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார். - குணப்படு 2. துக்கமடையாயோ?-பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ?-மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? - குணப்படு 3. தாவீ தரசனைப்போல்,-தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப்போல், பாவி மனுஷியைப்போல்,-மனம் பதைத்த பேதுருபோல், தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி. - குணப்படு 4. உன்னை நீ நம்பாதே!-இவ் வுலகையும் நம்பாதே; பொன்னை நீ நம்பாதே;-எப் பொருளையும் நம்பாதே; தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார், அனைவரைப்பற்று - குணப்படு ஞா. சாமுவேல் 127 கீர்த்தனை | குணப்படு பாவி | Gunappadu Paavi | michael samraj | composer thought