У нас вы можете посмотреть бесплатно மார்த்தாண்டத்தில் கள்ளக்காதலனுடன் லாட்ஜில் இருந்த பெண் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kanyakumari #newstoday #trending #benieltv #breakingnews #news #tamilnews #viralnews #kumarinews #marthandam திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 4பவுன் நகையுடன் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் திருவண்ணாமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பெண் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த பெண்ணுடன் 30வயதுடைய ஒரு வாலிபரும் தங்கியிருந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருவண்ணாமலை போலீசார் மார்த்தாண்டத்துக்கு விரைந்து வந்து, மார்த்தாண்டம் போலீசாரின் உதவியுடன் அந்த பெண் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்ததும், பெண்ணுடன் தங்கி இருந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் பெண்ணுக்கும் இடையே மிஸ்ட் கால் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அந்த பெண் கடந்த மாதம் நகையுடன் வீட்டை விட்டு வெளியேறி வாலிபரை தேடி மார்த்தாண்டம் வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு இடைக்கோடு பகுதியில் உள்ள வாலிபரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபரின் வீடு பூட்டி கிடந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணை திருவண்ணாமலைக்கு அழைத்து செல்ல போலீசார் முயற்சித்த போது, அந்த பெண் வாலிபருடன் தான் வாழ்வேன் என கூறி அடம்பிடித்து அங்கேயே அமர்ந்து விட்டார். இதையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பெண்ணுக்கு அறிவுரை கூறி திருவண்ணாமலைக்கு காரில் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.