У нас вы можете посмотреть бесплатно திருக்காட்டுப்பள்ளி l தாண்டகச்சதுரர் தேவாரம் l திருக்குறுந்தொகை l Thirumurai 5-84 l Thirukaatupalli или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருக்காட்டுப்பள்ளி l தாண்டகச்சதுரர் தேவாரம் l திருக்குறுந்தொகை l Thirumurai 5-84 l Thirukaatupalli திருக்காட்டுப்பள்ளி பதிகம் l திருக்காட்டுப்பள்ளி தேவாரம் l திருக்காட்டுப்பள்ளி அப்பர் தேவாரம் l Thirukaatupalli pathigam l Thirukaatupalli thevaram l Thirukaatupalli appar thevaram Video contents: 00:00 Intro 00:31 திருக்காட்டுப்பள்ளி பதிகம் முன்னுரை 01:05 1. மாட்டுப்பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் 01:45 2. மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே 02:20 3. தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் 02:58 4. அருத்தமும் மனையாளொடு மக்களும் 03:33 5. சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் 04:10 6. அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் 04:50 7. மெய்யின் மாசுடையார் உடல் மூடுவார் 05:26 8. வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் 05:57 9. இன்றுளார் நாளை இல்லை எனும் பொருள் 06:36 10. எண்ணிலா அரக்கன் மலை ஏந்திட திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை பதிகம் - திருமுறை 5-84 பதிக எண்: 5.84 குறுந்தொகை திருக்காட்டுப்பள்ளி பாடல் 1: மாட்டுப்பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கொண்டீர் கெடுவீர் இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறா முனம் காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே பாடல் 2: மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே பாடல் 3: தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி ஞான நாயகனைச் சென்று நண்ணுமே பாடல் 4: அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தமில்லை பொல்லாதது போக்கிடும் கருத்தன் கண்ணுதல் அண்ணல் காட்டுப்பள்ளி திருத்தன் சேவடியைச் சென்று சேர்மினே பாடல் 5: சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் அற்ற போது அணையார் அவர் என்றென்றே கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப் பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே பாடல் 6: அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல் செய் சடைத் தூமணிச் சோதியான் கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓரு உறுதுணை ஆகுமே பாடல் 7: மெய்யின் மாசுடையார் உடல் மூடுவார் பொய்யை மெய் என்று புக்குடன் வீழன்மின் கையின் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் ஐயன் தன்னடியே அடைந்து உய்ம்மினே பாடல் 8: வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள் காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை நீலகண்டனை நித்தல் நினைமினே பாடல் 9: இன்றுளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள் அன்று வானவர்க்காக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே பாடல் 10: எண்ணிலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் கண்ணுளார் கருதும் காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர் தம் வினை நாசமே