У нас вы можете посмотреть бесплатно 1960ல் நடைபெற்ற காமன் கூத்து அரிய ஆடியோ பதிவு. காமன் எரிந்த கட்சியா ஏரியாத கட்சியா கமுடு விவாதம்.... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
1960ல் நடைபெற்ற காமன் கூத்து போட்டி பாடல் அரிய ஆடியோ பதிவு. காமன் எரிந்த கட்சியா ஏரியாத கட்சியா விவாதிக்கும் 1960ம் கால கட்ட கமுடு விவாத மேடை நிகழ்ச்சி மற்றும் காமன் பண்டிகை பற்றிய தகவல்கள்.... காமட்டி பண்டிகை, காமன் பண்டிகை, கமுடு தின்னால் என பலவேராக அரியப்படும் காமன் பண்டிகையின் ஒரு கிடைத்தற்கறியா பழம்பெரும் ஆடியோ தொகுப்பு காமன் கூத்து இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருக்கின்றார். அதனால் தேவலோகம் அவதியுறுகின்றது. இந்த நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கச் செய்யும்படி மன்மதனுக்கு தூதோலை அனுப்புகின்றார். இந்திரனின் கட்டளையின் ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் சினத்தினால் மன்மதன் மடிகிறான். பின்னர் சிவனின் மகளான ரதி தந்தை சிவனிடம் அழுது புலம்பி என்னுடைய கணவனின் செயலுக்கு வருந்தி கணவனை உயிர்ப்பிக்குமாறு பணிகிறாள். மூன்றாவது நாள் சிவன் மன்மதனுக்கு உயிர் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. மன்மதன் தனது தவறை எண்ணி சிவனிடம் மன்னிப்பு கேட்கிறார். என்று கதை அமைகிறது. [3] காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், அந்தகன், கந்தர்வன், மன்மதன், மன்ராயன், மனோசித்தன், மனோகரன், மதனன், சேகரன், மதனசேகரன், சுந்தரன், ரதிமணாளன், வில்லாலன், புஷ்பவனன், மாறன், ஆனந்தன், வசந்த புஷ்பதானுவன் போன்ற பிற பெயர்களும் உண்டு. புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள்.[1] புராணக் கதைகள் தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன் காம தேவன் சிவனால் எரிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு. கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார். காம தேவனுக்குரிய காயத்ரி மந்திரம் கீழ்க்கண்டவாறு காமதேவாய விதுமகே புட்பதேவாய தீமகி தன்னோ அனங்கப் பரஞ்சோதியது பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. சோழன் செம்பியன் எடுத்த திருவிழாதொகு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார். பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்.[1] தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்.[2] இந்திர விழா அல்லது காமன் விழாதொகு தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [3] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம். மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். . #கமுடு பாடல் #காமாட்டி பண்டிகை #காமன் தெருகுக்கூத்து #கமுடு கீத் #கமுடு எரிப்பு #மன்மதன் எரிப்பு #மன்மதன் திருநாள் #manmadhan பண்டிகை #kamudu padal #kamatty பண்டிகை #kaaman therukkooththu #old pandigai #Dindigul kamatty pandigai #madurai kamatty pandigai #dindigul kaman therukkooththu #madurai kaman therukkooththu #Dindigul therukkooththu #19ம் நூற்றாண்டின் தெற்குக்கூத்து நாடக ஆடியோ பதிவு.....