У нас вы можете посмотреть бесплатно சிந்தனைப் பள்ளி: "ஜம்புத் தீவுப் பிரகடனம்" "தமிழர்கள் கொண்டாட மறந்த வரலாறு" - திருமுருகன் காந்தி. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழர்கள் கொண்டாட மறந்த வரலாறு " ஜம்புத் தீவுப் பிரகடனம் 1801" அன்பான தோழமை நெஞ்சங்களே! உங்களுக்கு எங்களின் வணக்கம்! இது உங்களின் “ஜீவா நாவா தமிழ்” சேனல். மண் சார்ந்து,மக்கள் சார்ந்து சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகளையும் கருத்தியல்களையும் விவாதப்படுத்தும் ஓர் உரையாடல் சேனலாகும். இந்த மெய்ந்நிகர் உரையாடல் மேடையை உங்களின் ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி மற்றும் பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய இணையவழி பண்பாட்டுப் பள்ளிகள் வாரந்தோறும் திங்கள் புதன் வெள்ளி மாலைகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றன. மெய்நிகர் மேடைகளின் நிகழ்வுகள்தான், பெரும்பாலும், “ஜீவா நாவா தமிழ்” சேனலின் காணொளிகளாகப் பரிணாமம் அடைகின்றன. அந்த வரிசையில் இது 30.07.25 அன்று மாலை நடைபெற்ற 381 வது மெய்ந்நிகர் மேடையாகும். எழுத்தாளரும் நெய்தல் நிலை சிந்தனையாளருமான வறீதையா கான்ஸ்டான்டின் தலைமை தாங்கினார். மார்க்சிய அம்பேத்கரியச் சிந்தனையாளரான வி சிவராமன் இசைப்பாடல் பாட, எழுத்தாளரும் சிறார்செயல்பாட்டாளருமான நான்சி கோமகன் கதை சொல்ல, நிகழ்வைப் பேராசிரியர் நா ராமச்சந்திரன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி " தமிழர்கள் கொண்டாட மறந்த வரலாறு" என்னும் பொருண்மையில் பேசினார். இது இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக பிரகடனம் செய்யப்பட்ட சுதந்திரப் பிரகடனம் பற்றியதாகும். இது வரலாற்றில் ஜம்புத் தீவுப் பிரகடனம் 1801 என்று அறியப்படுகிறது. இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் நிறைவுபா பாடலையும் அ ஜார்ஜ் பாடினார். மைய உரையைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களில் ராமச்சந்திரன், வறீதையா, காமு, கே சுப்பிரமணியன், ராமானுஜம், ப பா ரமணி, சிதம்பரநாதன் இலங்கை, எஸ் கே கங்கா ஆகியோர் பங்கெடுத்தனர் மேற்படி நிகழ்ச்சியை இக்காணொளி கொண்டிருக்கிறது. நீங்கள் முதன் முறையாக இந்த சேனலுக்கு வருகை தந்திருக்கிறீர்கள் என்றால், சேனலின் சந்தாதாரராக ஆகுங்கள் என்று வேண்டுகிறோம். மேலும், காணொளிக்கு விருப்பக் குறியீடு இட்டு, காணொளியைக் கண்டு , அதன் மீதான கருத்துக்களையும் கருத்திடுகளையும் பதிவு செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். மட்டுமல்லாமல், ஜீவாநாவா தமிழ் யூடியூப் சேனல் குறித்து உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களும் நம் அறிவுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு நல்லாதரவு நல்கிட உதவுங்கள் என்று மனதார வேண்டுகிறோம். உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்!