У нас вы можете посмотреть бесплатно புத்தாண்டு கொண்டாட்டம்: வேளாங்கண்ணியில் குவியும் அன்னையின் பக்தர்கள் 29 December 2024 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. வேளாங்கண்ணி பேராலயம் கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ தேவாலயங்களில் வேளாங்கண்ணி பேராலயம் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக் கடல் அமைந்துள்ளது வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. ஆங்கில புத்தாண்டு இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவிற்கு ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகள் வருகை இதன்படி இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். தொடர் விடுமுறை நேற்று முதல் தொடர் விடுமுறையால் உள்ளூர் பக்தர்களும் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் வேளாங்கண்ணியில் அலைமோதி வருகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயம், மாதாகுளம், நடுத்திட்டு, பழைய வேளாங்கண்ணி, கடற்கரை சாலை, வேளாங்கண்ணி கடற்கரை என எங்கு பார்த்தாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அலைமோதும் கூட்டம் இவர்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் குடும்பத்துடன் கடலில் இறங்கி குளித்தும் புகைப்படம் எடுத்தும் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு முன்னதாகவே வாழ்த்து செய்திகளை பரிமாறி வருகின்றனர். இது தவிர மேல்மருவத்தூர், பழனி உள்ளிட்ட கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் வேளாங்கண்ணி பேராலயத்தில் வந்து செல்கின்றனர். இதனால் வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 500 போலீசார் பாதுகாப்பு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 500 போலீசார் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என எஸ்பி ஹர்ஷ்சிங் கூறினார். 500க்கும் அதிகமான போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாங்கண்ணி பேரலாயத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியை கண்காணிக்க 250க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.