У нас вы можете посмотреть бесплатно #காதலுக்குமரியாதை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#காதலுக்குமரியாதை #trendingpoems #இசையும்கதையும் #entertainment #viral #tamil #tamilsong #tamilstory #trendingpoems / @trendingpoems பாடல் : 🎤 பெண் குரல் வாழ்த்தி விடுகிறேன்… வலி மறந்து சிரிக்கிறேன் வாழ்க்கை உன்னை அழைத்ததால்… விலகியே நிற்கிறேன் பாசம் குறையலே… பாதை மட்டும் பிரியுதே பூத்த காதல் சாகலே… புண்ணாய் மனசு மாறுதே 🎤 ஆண் குரல் விலக சொன்ன போதிலும் உன்னை மறக்க முடியல… விதி எழுதும் வரிகளில் என் விருப்பம் குறிக்கல… பணம் பேசும் உலகத்திலே பாசம் மொவ்னமானதே… பிரிவு வந்த போதிலும் இந்த காதல் பொய்யில்லை 🎤 பெண் குரல் நீ வாழ வேண்டும்… நான் சென்ற போதிலும் நீ சிரிக்க வேண்டும்… நான் அழுத போதிலும் உண்மை காதல் உருகுதே…. உலகம் தான் ஜெயிச்சதே… பட்டு உடையில் நீ நடக்க என் நிழலும் தொடருமா? புது உறவில் நீ சிரிக்க… நம்ம நினைவுகள் தடுக்குமா? அவள் உனக்கு வாழ்க்கை என்றால் நான் உனக்கு நினைவுகள் அன்றோ? நீ மகிழ்வாய் வாழனும் என்றால் என்னை நீ மறந்திடல் நன்றே… 🎤 ஆண் குரல் நீ இல்லா வீடு வெறுமைதானே நீ பேசா நாட்கள் சோகம்தானே பணம் இருந்தும் பாசம் இல்ல இந்த வாழ்க்கை சுமைதானே உன் கண்ணீர் காரணமா நான் சிரிக்க மாட்டேனே…. உன் தியாகம் மறந்தே நானும் வாழ்ந்திடத்தான் வேண்டுமா.… 🎶 இருவரும் காதல் நம்மோடு தான் காலம் மட்டும் எதிரிதான் பாதை பிரிந்தாலுமே பாசம் இன்னும் பிரியலே… 🎤 பென்குரல் வாழ்த்தி விடுகிறேன்… வலி மறந்து சிரிக்கிறேன் வாழ்க்கை உன்னை அழைத்ததால்… விலகியே நிற்கிறேன் காதலுக்கு மரியாதை! அந்த நகரின் செல்வச் சாலையில் உயர்ந்து நின்றது ஒரு பெரிய வீடு. வெள்ளைச் சுவர்கள், இரும்புக் கதவுகள், பாதுகாப்பு காவலர்கள் – அந்த வீட்டின் உரிமையாளர் ரகுநாதன்; பணமும் பெருமையும் ஒன்றாய் கலந்தவர். அந்த வீட்டின் ஒரே மகன் – ஆதித்யா. வெளிநாட்டில் படித்து வந்தவன். பணத்தில் வளர்ந்தாலும், பணத்திமிர் ஆதித்யாவிடம் சிறிதேனும் காணப்படவில்லை. மனதில் மனிதநேயம் கொண்டவன். ஆனால்… அவனது இதயமோ ஒரு சிறிய குடிசை வீட்டில் வாழும் மலர் என்பவளுக்குச் சொந்தமானது. 🌼 மலர் – ஒரு எளிய கனவு மலர்… ஏழ்மை அவளுக்குப் பழகிய தோழி. அவளது ஐந்து வயதிலேயே அப்பாவை இழந்தவள். அம்மாவின் உழைப்பில் தான் படித்தவள். பெரிய கனவுகள் ஒன்றும் இல்லை. “அம்மாவை எப்போதும் நிம்மதியாக வாழ வைத்தால் அதுவே போதும்” அது தான் அவளின் உலகம். ஆதித்யாவும் மலரும் ஒரே கல்லூரி. ஒரே பேருந்து. ஒரே பாதை. தாயின் கடின உழைப்பால் மலருக்கும் அந்தப் பெரிய கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அவளது அதிர்ஷ்டம் தான். அவனுக்கு அவள் சிரிப்பு பிடித்தது. அவளுக்கு அவன் மரியாதை பிடித்தது. அந்த நட்பு மெல்ல மெல்ல வளர்ந்தது. ஒரு நாள்… காதலாக மாறியது. ❤️ காதல் – ஆனால் பயத்தோடு “நம்ம காதல் உன் வீட்டுக்கு பிடிக்காது ஆதித்யா…” மலர் ஒருநாள் கண்களில் பயத்துடன் சொன்னாள். ஆதித்யா சிரித்தான். “பணம் தான் பெரியது என்றால் மனிதம் என்ன?” என்றான். அவள் நம்பினாள். அவனும் நம்பினான். இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு. எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஏதேதோ கலந்துரையாடினர். மனம் விட்டுப் பேசினர். ஆனால்… உலகம் வேறொரு கதையை எழுதியது. 🏠 வீட்டில் வெடித்த உண்மை ஒருநாள் ஆதித்யாவின் தாய் வசந்தி அவனது கைபேசியில் வந்த ஒரு செய்தியைப் படித்தாள். “மலர் ❤️” அந்த ஒரு பெயர் வீட்டையே அதிர வைத்தது. “ஏழைப் பெண்ணா?” “நம்ம குடும்ப மரியாதை என்ன ஆகும்?” “நீ படிச்சது இதுக்கா?” கேள்விக்கணைகள் மாறி மாறித் தொடுக்கப்பட்டன. சொல்லம்புகள் ஆதித்யனின் காதல் இதயத்தை குத்திக் காயப்படுத்தியது. ஆதித்யா அமைதியாக சொன்னான்: “அவள் நல்லவள். மனிதம் தெரிந்தவள்.” ரகுநாதன் கோபத்தில் கத்தினார்: “இந்த வீட்டில் ஏழை மருமகள் காலடி படக்கூடாது !” 💔 காதல் தோல்வி மலரிடம் வந்து ஆதித்யா அழுதான். “என்னால முடியல மலர்… அவர்கள் கேட்க மாட்டாங்க…” எனக்கு அவங்களும் வேணும் நீயும் வேணும். நான் என்ன செய்ய, சொல்லு! மலர் அமைதியாக சிரித்தாள். கட்டுப்படுத்த முடியாமல் அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஆதித்யாவும் கலங்கிய கண்களுடன் அவளை நோக்கினாள். சிறிது நேர அமைதிக்குப் பின் மலர் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள், “பரவாயில்லை ஆதித்யா… உன் வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாது. வீட்டாரை எதிர்த்து நாம் ஒரு போதும் சந்தோஷமாக வாழ முடியாது. So இதுவே நம் கடைசிச் சந்திப்பாய் இருக்கட்டும்……” அவள் விடுவித்தாள். பதிலுக்குக் காத்திராமல் சென்று விட்டாள். அவன் உடைந்து போனான். கூடவே அவர்களது காதல் கோட்டையும் உடைந்து நொறுங்கியது போன்ற உணர்வு…. அந்த நாளில் காதல் தோற்றது. ஒரு மாதத்துக்குள் ஆதித்யாவுக்கு நிச்சயம். திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டான். செல்வந்த குடும்பத்து பெண் – நந்தினி. அழகு…..படிப்பு…..பணம். ஆனால்…அவள் இதயம் அவனுக்குத் தெரியாதது. அவனது விருப்பு வெறுப்புக்கள் அவளுக்குத் தெரியாது. திருமண நாள் வந்தது. மணமேடையில் இருந்த போது கூட ஆதித்யாவின் மனதில் மலரின் முகம் மட்டுமே. மாங்கல்யம் கட்டினான்.ஆனால்……. அவனது இதயம் அங்கே இல்லை. திருமணத்துக்குப் பின் நந்தினி முயன்றாள். அன்பு கொடுக்க. புரிந்துகொள்ள. ஆனால்….. ஆதித்யா மௌனமாகவே இருந்தான். இப்போதெல்லாம் எதிலும் பிடிப்பில்லை. எதையோ பறி கொடுத்தவன் போல் காணப்பட்டான். ஒருநாள் நந்தினி வெளிப்படையாகவே கேட்டாள்: “உங்க மனசுல இன்னும் யாரோ இருக்காங்க இல்லையா?” அவன் கண்களில் கண்ணீர். பதில் இல்லை. மொவ்னம்….. அவள் புரிந்து கொண்டாள். இன்னும் சற்று அதிகமாகவே நேசிக்கத் தொடங்கினாள். 🌧️ மலரின் வாழ்க்கை மலர்… அம்மாவுடன் ஒரு சிறிய வீட்டில். காதல் தோல்வி அவளை உடைக்கவில்லை. உழைப்பை அதிகரித்தது. அவள் பட்ட கஷ்டங்களின் பிரதிபலனாக…….ஒரு நாள் அவள் ஆசிரியையாக நியமனம் பெற்றாள். குழந்தைகளின் சிரிப்பில் தன் துயரை மறைத்தாள்.