У нас вы можете посмотреть бесплатно சிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
விஜயநகர பேரரசின் கடைசி மன்னரான சீலப்ப நாயக்கர் 17 ம் நூற்றாண்டில் தருமபுரியை அடுத்த தென்கரைக்கோட்டையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் கோட்டை கட்டியுள்ளார். சீலப்ப நாயக்கரின் கனவில் ராமர் மணக்கோலத்தில் காட்சியளித்தால், கோட்டைக்குள் கல்யாண ராமர் கோயிலையும் கட்டியுள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் பார்வையாளர்களை கவருகின்றன. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயில் மட்டும் தான் ஓரளவிற்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயில் தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கோட்டைக்குள் அரண்மனை, தானியக்களஞ்சியம், குதிரை லாயம், ராணி நீராடும் குளக்கரை ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. 100 அடி உயரமுள்ள கோட்டை சுவர் பீரங்கி நிறுத்துவதற்கான அகலத்துடன் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் எதையும் முறையாக பராமரிக்காததால் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. தமிழக அரசு இதனை முறையாக பராமரித்து சுற்றுலாதலமாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து கோட்டையின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது. புதர் மண்டிய பகுதிகளை சுத்தம் செய்து பூங்கா அமைக்க வேண்டுமெனவும், சுற்றுலா பயணிகள் வந்து செல்ல சாலை வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும். தென்கரைக்கோட்டையை சுற்றுலாதலமாக மாற்றினால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, மக்களும் பழங்கால கோட்டையை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். #THENKARAIKOTTAI #Damaged For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: https://rb.gy/ndt8pa