У нас вы можете посмотреть бесплатно திருவண்ணாமலை - சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தில் நடைபெற்று வந்த விவசாயிகள்குறை தீர்வு கூட்டம், மாற்றுத்திறனாளர் குறைதீர்வு கூட்டங்கள் நடைபெறாது என்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் , சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கவும்,செலவினங்களை கட்டுப்படுத்தவும் பறக்கும் படை குழு,நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஊடக கண்காணிப்பு மற்றும் சான்று அளிப்பு குழு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறையும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் சம்மந்தமாக 18004257005 என்ற கட்டணமில்லை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், வாக்காளர் பட்டியலில் பெயர் சம்மந்தமாக 1950 என்ற எண்ணிற்கும்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்து C VIGILஎன்ற இணைய வழிமூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மாற்றுத்திறனாளர் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டங்கள் நடைபெறாது என்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் மனு பெட்டிகளில் செலுத்தலாம் என்றும் தர்ப்பகராஜ் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.