У нас вы можете посмотреть бесплатно பூரண பொக்கிஷம் “உயிரே கடவுள் “ பகுதி 3 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மனித பிறவியின் நோக்கமே முக்தி தான்: முக்தி என்றால் என்ன? அதை அடைவது அவ்வளவு அரிதா? ஒரு எளிய அனுபவ விளக்கம். முக்தி என்பது எங்கிருந்து இந்த சரீரம் அமைந்ததோ நம்மை சிருஷ்ட்டித்த அந்த ஆதியான மூல பொருள் எதுவென அரிவால் அறிந்து அதனில் ஐக்கியமாதல்தான். இதற்க்கு நாம் புறத்தில் காணும் எதுவும் உதவாது. நம் ஞானம் மட்டுமே வழி காட்டும். நம் ஞானத்தை தூண்டிவிட ஒரு தூண்டு கோலாக நல்ல குருமார்களை நாட வேண்டும். நம் சரீரம் நம் உயிரால் சிருட்டிக்கபட்டது. நம்மால் உணரக்கூடியது நம் உயிர் மட்டுமே. அது மட்டுமே நமக்கு சொந்தமானது. நம் கவனத்தை சரீரத்தில் இருந்து விடுத்து உயிர்தான் நான் எனும் மனநிலையோடு பழகி வந்தால் நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே நாம் மாறிவிடுவோம். நம் சரீரம் அழியக்கூடியது. ஆனால் உயிர் அழிவில்லாதது. இந்த அழிவில்லா நிலை தான் முக்தி நிலை. பிரபஞ்சம் முழுதும் பஞ்ச பூதமாகி, பல்லுயிராகி, பல்லுருவாகி, ஓம் எனும் ஓர் அணுவுக்குள் அகாரம் - அறிவு, உகாரம் - உயிர், மகாரம் - மனம், எனும் பிரணவத்தின் பொருளாகி, நாதமான பெண்ணாகி, ஜோதியான ஆணாகி, ஆணுக்குள் பெண்ணாகி, பெண்ணுக்குள் ஆணாகி, நிற்கும் பரம் பொருளை அடைவதே முக்தி. அந்த பரம்பொருலான உயிரே நம்முருவாகி வந்துள்ளது.அதுவே உண்மை. உயிர் படைத்த உடலை வைத்துக் கொண்டு நான் என்று பிதற்றுவது தான் மாயை. அந்த மன மாயை நீக்கி நான் உயிர் என்று தியானித்து அழியாத உயிர் நிலை அடைதலே முக்தி. உயிர் நிலை எனும் முக்தி எப்படி அடைவது?. வெறும் பக்தியால் மட்டும் முக்தி அடைய இயலாது. ஞான மார்க்கமாக நாம் எப்படி பிரபஞ்சத்தில் இருந்து உயிராகி கருவாகி சரீரமாகி வந்தோமோ, அவ்வழியே சென்று இயற்கையோடு ஐக்கியமாதலே முக்தி. உயிர்ஞான மார்க்கமாக உடலை உயிராக்குதலே முக்தியாகும். ஆதியானது உயிர். ஆதியான உயிர் நிலை அடைதலே சமாதி நிலை எனும் முக்தி நிலை. சித்தர்களின் முக்தி மார்க்கம் இப்படி எளிமையாக இருக்க உருவ வழிபாடும் பழைய புராணங்களும் எங்கே முக்திக்கும நோயற்ற வினைகளற்ற வாழ்வுக்கும் வழி சொல்கிறது?. உயிரான கடவுள் நம்மை படைக்கும்போதே, அவனை அடையும் வழியையும் கொடுத்தே அனுப்பியுள்ளான். உயிர் பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருந்தாலும் நம்மிடம் உள்ள நமக்கு சொந்தமான உடலை உயிரை கொண்டே உயிராக்கி விட்டால், உயிர் பரவெளியாகி விடும் இதுவே அழிவில்லாத வீடுபேறு. சரீர நிலைக்கும் உயிர் நிலைக்கும் இடைப்பட்டது கவனம் தான்.கவனம் சரீரத்தில் இருப்பதை விடுத்து உயிரில் நிலைக்க செய்வதே உயர்ந்த உயிர் நிலை உயிர்கலை சரீரம் காலத்துக்கு உட்பட்டது ஆதலால் காலனால் வீழ்த்தபடுகிறது. உயிர் காலத்துக்கும் காலனுக்கும் அப்பாற்பட்டது, அழிவற்றது. கவனத்தை அழிவற்ற உயிரில் வைக்க பழகி கொண்டால் நாம் உயிராகி போவோம். நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறிப் போவோம். மனதுக்குஅப்படி ஒரு அதீதசக்தி உண்டு. ஆகவே மனபலத்தை கொண்டு ஊன் தேகத்தை கவனத்தில் இருந்து விடுத்து உயிர் கவனத்தில் நிலைத்து அழிவில்லா உயிர் தேகமாக மாற்றிவிட்டால் பிணி மூப்பு சாக்காடு எனும் சரீர சாபங்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம். இதுவே முக்தியின் ரகசியம். நமக்கு சொந்தமான உயிரை கொண்டுமட்டும் தான் முக்தி அடைய இயலும். நமக்கு முக்திக்கான வழியைத்தான் குருமார்கள் காட்டுவார்கள். நம் முன்னேற்றத்துக்கு நாம் தான் முயல வேண்டும். உயிர்இன்றி எந்த குருவும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, உயிரே அனைத்துக்கும் மூலம்.ஆதியானதும் அனைத்துக்கும் மூலமானதும் உயிர் ஒன்றே. இப்படி வெளிப்படையாக யாரும் உரைத்தது இல்லை. ஆதி நாத சித்தர்கள் காலம் கருதி முக்தி மார்க்கத்தை மிகவும் எளிமையாக்கி உள்ளனர். “சம்மதம் உயிராலயம் செல் : 9442891174 & 9787407950” FB Page : / sstsua Web Page : www.sammatham.com #உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள் #பூரண பொக்கிஷம்