Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Ilangai Jeyaraj - Vaan Sirappu - PARMEL AZHAGAR URAI - FULL VIDEO в хорошем качестве

Ilangai Jeyaraj - Vaan Sirappu - PARMEL AZHAGAR URAI - FULL VIDEO 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Ilangai Jeyaraj - Vaan Sirappu - PARMEL AZHAGAR URAI - FULL VIDEO

பாயிரவியல்- அதிகாரம் 2. வான்சிறப்பு அதிகார முன்னுரை: அஃதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும், நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். திருக்குறள்: 11 வானின் றுலகம் வழங்கி வருதலாற் வான் நின்று உலகம் வழங்கி வருதலால் றானமிழ்த மென்றுணரற் பாற்று. தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் உலகத்திற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது. உரை விளக்கம்: நிற்ப என்பது, நின்று எனத்திரிந்து நின்றது. உலகம் என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது, பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார். திருக்குறள்: 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉமழை. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை. பரிமேலழகர் உரை: துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. பரிமேலழகர் உரைவிளக்கம்: தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின் அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம். திருக்குறள்: 13 விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி. பரிமேலழகர் உரை: விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்; விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி = நிலைபெற்று உயிர்களை வருத்தும் பசி. 'பரிமேலழகர் உரைவிளக்கம்: கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார் 'விரிநீர் வியனுலகத்'தென்றார்; உணவின்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம். திருக்குறள்: 14 "ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்." (04) வாரி வளம் குன்றிக்கால். பரிமேலழகர் உரை: உழவர் ஏரின் உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் தன்பயன் குன்றின். பரிமேலழகர் உரைவிளக்கம்: 'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு. திருக்குறள்: 15 "கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. பரிமேலழகர் உரை: கெடுப்பதூஉம் = பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை = இவை எல்லாம் வல்லது மழை. பரிமேலழகர் உரை விளக்கம்: `மற்று` வினைமாற்றின்கண் வந்தது. `ஆங்கு` என்பது மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார். `எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. வல்லது என்பது அவாய்நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு. திருக்குறள்: 16 "விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது." விசும்பின்துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது. பரிமேலழகர் உரை: (இதன் பொருள்)விசும்பின் துளி வீழின் அல்லால் = மேகத்தின் துளி வீழின் காண்பதல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது = வீழாதாயின், அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. பரிமேலழகர் உரைவிளக்கம்: 'விசும்பு' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்.

Comments